ஆசிகள் அருளும் ஆஷாட நவராத்திரி.. [July 15 --july 23.] ஆஷாட நவராத்திரியை வாராஹி நவராத்திரி என்று கொண்டாடுவது வழக்கம். ஆனி மாத அமாவாசையை அடுத்த பிரதமை தினத்தில் தொடங்கி நவமி வரையிலான நாள்களே ஆஷாட நவராத்திரி. இதில் தேவியை வாராஹியாகக் கொண்டாடுவது வழக்கம் மகா வாராஹி இந்த ஆண்டு வாராஹி நவராத்திரி, ஜூலை 15 - ம் தேதி தொடங்கி ஜூலை 23 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 10 நாள்களுமே அன்னை வாராஹியை வழிபடுவது சிறப்பு. 10 நாள்கள் வழிபட முடியாதவர்கள், முக்கியமான விசேஷ தினங்களான பஞ்சமி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் வழிபடுவது நல்லது. பலன் தரும் பஞ்சமி[18.07.2026] சனிக்கிழமை குறிப்பாக பஞ்சமி வாராஹியை வழிபட மிகவும் உகந்த நாள். அன்னைக்கு பஞ்சமி என்கிற நாமமும் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு பஞ்சமிக்கும் விசேஷ வழிபாடுகள் செய்வது வழக்கம். அதிலும் ஆஷாட நவராத்திரி நாள்களில் வரும் பஞ்சமி மிகவும் சிறப்பானது. இந்த நாளில் அன்னை வாராஹியை வணங்கினாலே வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. அன்னை வாராஹி குறிப்பாக ஆஷாட நவராத்திரியை வாராஹி நவராத்திரி என்று கொண்டாடுவது வழக்கம். ஆனி மாத அமாவாசையை அடுத்த பிரதமை தினத்தில் தொடங்கி நவமி வரையிலான நாள்களே ஆஷாட நவராத்திரி. இதில் தேவியை வாராஹியாகக் கொண்டாடுவது வழக்கம். வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவர். அன்னை லலிதா பரமேஸ்வரியின் சேனைகளின் தளபதியாகத் திகழ்பவள். இவளுக்கு தண்டினி என்கிற திருநாமமும் உண்டு. அவளைச் சரணடைந்தால் நம் துன்பங்களை எல்லாம் தண்டித்து விரட்டி சகல சௌகர்யங்களையும் அருள்பவள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையின் பிரதானக் கோயிலான பிரகதீஸ்வரர் திருக்கோயில் எனப்படும் பெரிய கோயிலில் அன்னைக்குத் தனிசந்நிதி கண்டு வழிபட்டான் ராஜராஜன். எனவே தஞ்சைப் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் அன்னைக்கு நவதானியம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமம், இனிப்புகள், காய்கறிகள் எனப் பல்வேறு பொருள்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். 12 நாமங்கள் ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ . ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ. ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ. வராஹி அம்மனின் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் இதோ: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் நன்மைகள்: இந்த மந்திரத்தை தினமும் 108 முறை அல்லது செவ்வாய், வெள்ளி மற்றும் தேய்பிறை பஞ்சமி திதிகளில் உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் பிறக்கும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் மற்றும் வீடு, மனை யோகம் அமையும் என்பது ஐதீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏நமசிவாய ஓம்✨ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️ #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯
67 likes
33 shares

More like this