💙 kalai 💙
513 views 9 days ago
*#கடவுள் எப்படிப்பட்டவன்?* *#கவியரசன் கண்ணதாசன் சொன்னது*. ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, பூலோகத்தில் வாழும் போது புகழையும் கொடுப்பான். பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். *அவன் தான் கடவுள்*, பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான். அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான். பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். *அவன் தான் கடவுள்*, கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான். *அவன் தான் கடவுள்*, அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான். அதை முழுவதும் பயன் படுத்தாத மனிதர்களையும் படைப்பான். *அவன் தான் கடவுள்*, தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். *அவன் தான் கடவுள்*, ‌நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். *அவன் தான் கடவுள்*, புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். *அவன் தான் கடவுள்*, கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். *அவன் தான் கடவுள்*, மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். பின்னிருந்து இயக்குவான். *அவன் தான் கடவுள்*, தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான். (உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். நமசிவாய🤘 #🙏ஆன்மீகம் *அவன் தான் கடவுள்!!!
19 likes
15 comments 8 shares

More like this