#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மன் சுரசு ஊர்வலமாக வீதியில் சென்று பின்பு நையாண்டி மேள தாளத்துடன் சிரசுஎற்றம் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகா ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு பேமஸ் காபி பார், (வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்) சத்துவாச்சாரி ஆன்மிக குரு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும்
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும்A.சிவராமன்பேமஸ் காபிபார், கே. செந்தில்குமார், ஆர். மணிகண்டன், எம். சீனிவாசன், ஆர் நரேஷ் பாபு, எம் கோபிநாதன், கே சுரேஷ், ஆகியோர் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி 11 வது ஆண்டாக நடைபெற்றது.


