S.ANTHONY✝️YESUMARY
1K views • 8 hours ago
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*27.07.2026 (திங்கள்)*
*⚜️மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல்,
*"உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்."* -என்று இணைச்சட்டம் நூலில் கூறப்பட்டுள்ளது.
நாம் நம் வாழ்வில் நம்மைப் படைத்த கடவுளை மறந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
*"தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்."* என வாசித்தோம்.
ஆண்டவரின் படைப்பில் நாம் முதற்கனிகளாக மாற நாம் எத்தகையதொரு தூய வாழ்வு வாழ வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*
இன்றைய புனிதர் திருத்தந்தை முதலாம் செலஸ்டின் நமது திருவழிபாட்டின் சில பகுதிகளை உருவாக்கியவர்.
ஆலயங்களில் நடைபெறும் திருவழிபாட்டில் கவனச்சிதறல் இல்லாமல் நாம் பக்தியோடு கலந்து கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,*
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
31 likes
1 comment • 56 shares