saravanan.
737 views 2 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 07.08.2026 ) ............................................................ *குறள் சொல்லும் நீதி...! ( ''அடக்கம்'')* ………………………………….................................. குறள் 121: .................... அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். விளக்கம்... ..................... அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதியிருக்கிறார்கள்... மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலைபாயாத மனம் இருந்தால் ஆசை தறிகெட்டு ஓடாது...! சொல்லாடலில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரட்டு, பொய், என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும். பேச்சில் அடக்கம் இருந்தால் கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்... அளவுக்கு அதிகமான கொழுத்த உணவுகள், கட்டுபாடற்ற பணத்தாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும்... புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.. அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை எறிந்தால் அந்த ஆறு கட்டையை கடலில் கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். அந்த ஆற்றில் கிடந்தால் போதும்... மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகைவண்டி நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்தக் கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்... ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்... ஆனால்!, அடக்கமின்மை இருளுள் தள்ளி விடும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. கண் தெரியாத இருட்டு... புலன் அடக்கம் இல்லாதவரைப் பார்த்தால் தெரியும் , ஏதோ கண் தெரியாதவரைப் போல தவறான பாதையில் அவர்கள் செல்வது தெரியும்... இருட்டில் இருப்பவருக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது... அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றையெல்லாம் கவனிக்காமல், வேறொன்றின் பின் செல்வார்கள், அருகில் உள்ளது அவர்களுக்குத் தெரியாது... மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று.., ஆனால்!, கேட்காமல் நேரே அந்தக் கடைக்குத் தான் அவர்கள் செல்வார்கள்... புலன் அடக்கம் இல்லாதவர் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து, சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பார்கள்... நன்கு ஆலோசித்துப் பாருங்கள், ''அடக்கம் எவ்வளவு உயர்ந்தது'' என்று. ''அடக்கமின்மை'' எத்தனை துன்பங்களுக்கு காரணம் என்று... *ஆம் நண்பர்களே...!* அடக்கம் உயர்வு தரும்; அதுவே வெற்றிக்கு வழி...! அடங்காமை துன்பத்தில் ஆழ்த்தி விடும்...!! தன் நிறை, குறைகளை அறிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...!!! சான்றோரின் உயர்பண்பு என்பது அடக்கம் தான், அடங்காமை அல்ல... -உடுமலை சு. தண்டபாணி✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
7 likes
6 shares

More like this