ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - நமசிவாய ஓம் மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழச் செய்யினா ரகன்கழனிச் செங்காட்டங் குடியதனுட் கையினார் கூரெரியான் கணபதீரச் சரத்தானே. நமசிவாய ஓம் மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழச் செய்யினா ரகன்கழனிச் செங்காட்டங் குடியதனுட் கையினார் கூரெரியான் கணபதீரச் சரத்தானே. - ShareChat