#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🙏சமயபுரம் மாரியம்மன் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # லெட்சுமி... செல்வவளங்களை அள்ளி அள்ளி பக்தர்களுக்கு அருளும் ஸ்ரீ லட்சுமி ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு தோற்றத்தில் அவதரித்து அருள் புரிந்திருக்கிறாள். கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கிறது. கல்பகாலம் என்பது ஆயிரம் மகாயுகங்கள். மகாயுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள் கொண்டது. ஆயிரம் மகாயுகங்கள் 432 கோடி மானுட ஆண்டுகளுக்குச் சமம். 1 சதுர்யுகம் = 43,20,000 ஆண்டுகள் 1 மனுவந்தரம் = 71 சதுர்யுகங்கள் நிலைமாற்ற காலம் = 6 சதுர்யுகங்கள் 14 மனுவந்தரம் (994 சதுர்யுகங்கள்) + நிலைமாற்ற காலம் (6 சதுர்யுகங்கள்) = 1 கற்பம். 1 கற்பம் = 432 கோடி ஆண்டுகள் = 1,000 சதுர்யுகங்கள். 360 கற்பங்கள் (=பகல்கள், பேச்சு வழக்கில் 'நாட்கள்') = பிரம்மனின் ஓர் ஆண்டு. பிரம்மனின் 100 ஆண்டுகள் = பிரம்மனின் ஆயுள். ஒரு மனுவின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு இந்திரனின் ஆட்சிக்காலம். பதினான்கு இந்திரர்களும் அதே சமயத்தில் பதினான்கு மனுக்களும் தோன்றி மறைந்த கால அளவு பிரம்மனுக்கு ஒருநாள். பிரம்மனின் ஒரு பகல் ஒரு 'கல்பம்' எனப்படும் இதுவரை ஏழு மன்வந்தரங்கள் முடிவடைந்துள்ளது. 7 மன்வந்தரங்களில் அவதரித்த ஸ்ரீ மகாலெட்சுமி ஸப்த லட்சுமியர் என்று போற்றி வழிபடப்படுகின்றனர். அந்த ஏழு மன்வந்தர மகாலட்சுமிகள் 1. பார்கவி 2.ஜாத வேதஸ் 3.ஆர்த்ரா 4.கந்தத்வாராம் 5.தபஸ்வினி 6.பத்மாலயாயை, பத்மினீ 7.ஸ்ரீ மகாலெட்சுமி. 1. ஸ்வாயம்புவ மன்வந்தரம் பார்கவியாக ஸ்ரீ லெட்சுமி பிருகு முனிவர், ஸத்வகுணமூர்த்தி யார் என்று அறிய திருமாலின் மார்பை எட்டி உதைத்தார். அதைக்கண்ட திருமகள் மனம் வருந்தி, பூமிக்கு தவமியற்ற புறப்பட்டாள். பிருகு முனிவர், திருமகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ‘என் மார்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டி உதைத்து அருள்வாய்! என்னை மன்னித்திடு தாயே!’ என வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கே மகளாக, பார்கவி எனும் திருநாமத்துடன் மகாலட்சுமி தோன்றி, குழந்தையாக, ஆனந்தமாக அவர் மார்பில் எட்டி உதைத்து விளையாடினாள். தக்க பருவம் வந்ததும் திருமாலை மணந்தாள். ஸ்ரீயை தன் குலமகளாக பெற்றதால் அவர் வம்சம் ஸ்ரீவத்ச கோத்ரமாயிற்று. திருமாலை மணந்த பின் பிருகு முனிவர் எட்டி உதைத்த காற்சுவடு திருமாலின் திருமார்பில் மச்சம் போன்று பதிந்திருந்தது. தேவி அதை வாஞ்சையுடன் தடவ அன்று முதல் அந்த மச்சம் ஸ்ரீவத்ஸம் எனப் போற்றப்பட்டது. 2. ஸ்வாரோசிஷ மன்வந்தரம் ஜாத வேதஸ் ஆக ஸ்ரீ லெட்சுமி இந்த மன்வந்தரத்தில் மகாலட்சுமி அக்னியிலிருந்து ஆவிர்பவித்தாள். பிறக்கும்போதே ஞானி எனப் பொருள்படும் ஜாத வேதஸ் எனும் பெயர் கொண்டாள். ஸ்ரீ ஸூக்தத்தின் தொடக்கமே, ‘ஹே! ஜாதவேதனே! பொன் நிறத்தினளே, பாவங்களை எரிப்பவளும் பொன்னாலான மாலையை அணிந்தவளும் நிலவை ஒத்த குளிர்ச்சியை உடைய பொன்னியாகிய திருமகளை எனக்குக் கருணை செய்ய எழுந்தருள்வாய்’ என்றே வேண்டுகிறது. ஞானப் பிரகாசத்தோடு நிலவின் சீதளம் கலந்து சந்திரையாக இந்த மன்வந்தரத்தில் தேவி அவதரித்தாள். 3. ஔத்தம மன்வந்தரம் ஆர்த்ரா ஆக ஸ்ரீ லெட்சுமி இந்த மன்வந்தரத்தில், தேவி தெளிந்த நீரிலிருந்து ஆவிர்பவித்தாள். வைகுந்தத்தைச் சூழ்ந்த விரஜா எனும் நன்னீர்ப் பெருக்கிலிருந்து தோன்றினாள். நனைந்தவள் எனும் பொருள்படும் ஆர்த்ரா என்னும் பெயரை ஸ்ரீஸூக்தத்தின் இரு மந்திரங்கள் குறிக்கின்றன. இவளுக்குரிய ஆர்த்ரா நட்சத்திரமே சிவபெருமானுக்குரிய ஆதிரை நட்சத்திரமுமாகும். இவள் செக்கச் சிவந்த திருமேனியுடன் மூவுலக சக்ரவர்த்தினியாக, கையில் செங்கோல் ஏந்தியருள்வதை, ‘ய: கரிணீம் யஷ்டீம்’ என்று ஸ்ரீஸூக்தம் குறிப்பிடுகிறது. இவளுக்கு சிக்லீதர் எனும் பெயரில் மன்மதன் மகனாகத் தோன்றினான். அதனால்தான், ‘சிக்லீதரே! நீ என் வீட்டில் வசித்து, திருமகளை எங்கள் குல தெய்வமாக்க வேண்டும். எங்களுக்குப் பால், நெய் போன்ற பசையுள்ள பொருட்களை தாராளமாக அளிக்க வேண்டும்’ என ஸ்ரீஸூக்தம் பிரார்த்திக்கிறது. 4. தாமஸ மன்வந்தரம் கந்தத்வாராம் ஆக ஸ்ரீ லெட்சுமி. இந்த மன்வந்தரத்தில் தேவி பூமாதேவியின் புதல்வியாக பூமியிலிருந்து அவதரித்தாள். மண்ணின் சிறப்பான குணம், அதன் மணம். எனவே திருமகளை மணத்தின் வாயிலாக அடையத்தக்கவள் எனும் பொருள்படும்படி ‘கந்தத்வாராம்’ என்று ஸ்ரீஸூக்தம் போற்றுகிறது. இந்த மன்வந்தரத்தில் அலைமகளே நிலமகளானாள். இந்த தேவி யாராலும் வெற்றிபெற முடியாதவள், ஊக்கம் தருபவள், அனைத்திலும் நிறைந்தவள், அனைத்துயிரையும் ஆளும் ஈஸ்வரி என மறைகள் போற்றுகின்றன. 5. ரைவத மன்வந்தரம் தபஸ்வினி ஆக ஸ்ரீ மகாலெட்சுமி இந்த மன்வந்தரத்தில் வில்வ மரத்திலிருந்து தேவி தோன்றியருளினாள். பசுமையும் கம்பீரமும் இணைந்தது வில்வமரம். அந்த பண்புகளின் வடிவாய் தேவி தோன்றினாள். அந்த வில்வ மரத்தினடியில் உலக நன்மைக்காக தவமியற்றிய தபஸ்வினி இவள். அதன் பலனாலேயே சாதாரண காட்டு மரமாகிய வில்வம், வனஸ்பதி எனும் காட்டரச மரமாயிற்று. அதையே ஸ்ரீஸூக்தம், ‘ஸுர்ய வர்ணமுடையவளே! நினது தவத்தாலேயே வில்வத் தரு வனஸ்பதியாயிற்று. அதன் ஞானப்பழமானது உள்ளே உள்ள அஞ்ஞானத்தையும், வெளியே உள்ள அமங்கலத்தையும் அழிக்கட்டும்’ எனப் போற்றுகிறது. 6. சாக்ஷூஸ மன்வந்தரம் பத்மாலயாயை, பத்மினீ ஆக ஸ்ரீ லெட்சுமி இந்த மன்வந்தரத்தில் செந்தாமரையில் அவதரித்தாள் மகாலட்சுமி. அதே செந்தாமரையில் அமர்ந்தாள். யோகிகளின் உடலில் மூலாதாரம் முதல் ஸஹஸ்ராரம் வரை ஈறான யோகானுபவ ஸ்தானங்கள், கமலங்களாக இருப்பது இவள் மகாயோகேஸ்வரி என்பதைக் காட்டுகிறது. பரமேச்வரியான பராசக்தி திருமகளின் தொடர்புடன் திரு ஆர் ஊர் (திருவாரூர்) எனும் தலத்தில் கமலாம்பிகையாக தவயோகினியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பத்மத்திலிருந்து உதித்த இவள், பத்மத்தில் அமர்ந்தவள். பத்மாலயாயை, பத்மினீ எனும் பெயரைத் தாங்குபவள். பத்மம் போன்ற கண்களைக் கொண்டவள். ஸ்ரீஸூக்தம் இதையே, ‘பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே, பத்மாலயே பத்மதளாயதாக்ஷி’ என்று கூறி துதிக்கிறது. 7. வைவஸ்வத மன்வந்தரம் ஸ்ரீ மகாலெட்சுமியாக ஸ்ரீ லெட்சுமி. இதுவே தற்போது நடைபெறும் மன்வந்தரம். தேவாசுரர் பாற்கடலைக் கடையும் போது பாற் கடலிலிருந்து இந்த மன்வந்தரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். ஐராவதம், உச்சைஸ்ரவஸ் எனும் குதிரை பின் தொடர ரதத்தில் ஆரோகணித்து பாற்கடல் புத்திரியாக தேவி உதித்ததை ஸ்ரீஸூக்தத்தின் மூன்றாவது ரிக்கான ‘அஷ்வபூர்வாம் ரத மத்யாம்’ எனும் துதி விளக்குகிறது. கர்தம பிரஜாபதி எனும் முனிவருக்கு மகளானாள் மகாலட்சுமி. ஸ்ரீஸூக்தம் கர்தமரை வேண்டி உமக்கு லட்சுமி மகளானாள். அவள் என்னுடைய குலத்தில் வாசம் செய்ய நீர் எனக்கு அருள வேண்டும்’ என்று துதிக்கிறது. ஸ்ப்த லட்சுமிகள் பற்றிய தகவல் நன்றி சந்தியா முரளிதரன்.

More like this