ரவிசங்கர் ராஜா, ஆரணி
749 views 1 months ago AI indicator
*இன்று*(15-6-26) மாதப்பிறப்பு* *ஷடசீதி புண்ய காலம்*! உபய ராசிகளான மிதுனம், கன்னி,தனுசு,மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் ஆனி ,புரட்டாசி மார்கழி ,பங்குனி ஆகிய தமிழ் மாதபிறப்பு நாட்களில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலம் எனப்படும். இன்று(15-6-26)ஆனி மாதப்பிறப்பில் சூரியன் மிதுன ராசியில் செல்லும் காலம் ஷடசீதி புண்ய காலமாகும். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசியில் வரும் நேரத்திற்கு பின்னர் 24மணிநேரம் ஷடசீதி என்ற புண்ணிய காலமாகும். மிதுன ராசி உபயராசியாகும் சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும். சிவபெருமானுக்கு மிகப்பிரியமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். இக்காலத்தில் சிவன் சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும். ஆற்றலையும் மனம் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. அதாவது அன்று சிவனையும் பார்வதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும் இந்த ஷடசீதி புண்ய காலம் தேவர்கள் சிவனை வழிபடும் காலமாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவன் கோவில்,ஜீவ சமாதிகள் அமைந்துள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. 'திரு’ என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை இன்று வழிபட்டு வருவது மிகுந்த சிறப்பாகும். இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவனை வழிபட்டு பிரார்த்தனை வேண்டுதல் வைத்தால், வேண்டுதல் வைப்பவர்களின் பிரார்த்தனை,வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். இன்றைய தினம் முழுவதும் முடிந்த வரை சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இன்றைய ஷடசீதி புண்ணிய நாளில் நாம் சிவபெருமானிடம் வேண்டுவது நிச்சயம் நிறைவேறும். இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் பித்ருக்களின் ஆசியும் அருளும் நிச்சயம் கிடைக்கும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #ஆனி #ஆனி மாதம் தொடக்கம்! #வெல்கம் ஆனி
9 likes
4 shares

More like this