Nethaji
592 views • 28 days ago
Jul 12, 2026
திருச்சிற்றம்பலம்
*எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறை*
*திருவாசகம் - திருச்சதகம் - அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
இடையறா அன்பு அருளுக - பதிகம்*
*பாடல்* :
யானேதும் பிறப்பஞ்சேன்;
இறப்பதனுக்கு என்கடவேன்?
வானேயும் பெறில்வேண்டேன்;
மண்ணாள்வான் மதித்துமிரேன்;
தேனேயும் மலர்க்கொன்றைச்
சிவனே!எம்பெருமான்! எம்
மானே! 'உன்அருள்பெறுநாள்
என்று?'என்றே, வருந்துவனே. - 8.005.12
*பொருள்* :
*’நான் இனிமேலும் இப்பூமியில் பிறப்பதைக் கண்டு சிறிதும் அஞ்சமாட்டேன். இந்த உடல் அழியும் மரணத்தைக் கண்டு நான் ஏன் கவலைப்பட வேண்டும்? தேவர்கள் வாழும் விண்ணுலகப் (சொர்க்கப்) பதவியே எனக்குக் கிடைத்தாலும், அதை நான் விரும்பமாட்டேன். இந்த ஒட்டுமொத்த பூமியையும் ஆளும் பேரரசன் பதவியைத் தந்தாலும், அதை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன். தேன் நிறைந்த கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானே! என் தலைவனே! என் பெருமைமிக்கவனே! 'உன்னுடைய பேரருளை நான் முழுமையாகப் பெறும் நாள் எந்நாளோ?' என்று எண்ணி எண்ணி, உருகி வருந்துகிறேன்.’ என எம்பிரான் மாணிக்கவாசகர் ஈசன் திருவடி வேண்டி உருகுகிறார்.
*திருச்சிற்றம்பலம்*
#🙏கோவில் #👏Inspirational videos #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #ஆன்மிகம்
14 likes
14 shares