#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை சிந்தனை* *"இல்லத்திலே மதிப்பு"* இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, சில வேளைகளில் ஒருவருக்குத் தம் சொந்த வீட்டில்கூட மதிப்பு இருப்பதில்லை. பெற்றோரும். உடன் பிறந்தோரும் ஒருவரின் கனவுகளை, ஆர்வங்களை, ஆற்றல்களைப் புரிந்துகொள்ளாமல் ஏளனம் செய்வதையும், ஊக்கப்படுத்தாமல், குறைகூறி சோர்வடையச் செய்வதையும் பார்த்திருக்கிறோம். ஒருவேளை நமக்கேகூட அப்படி நடந்திருக்கலாம். இறைமகன் இயேசுவின் வாழ்விலும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது என்பது நமக்கு வியப்பைத் தருகிறது. ஆறுதலும் தருகிறது. இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், நமக்கு எந்தக் கதி? இன்றைய வாசகம் இதனை மாற்றி அமைக்க அறைகூவல் விடுக்கிறது. நமது வீட்டில் நம்மோடு வாழும் சொந்தங்களைப் பற்றிச் சிறிது சிந்தித்து, முதலில் அவர்களை ஏற்கவும், மதிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் கற்றுக்கொள்வோம். ஊhயசவைல டிநபiளெ யவ hழஅந என்ற வாக்கிற்கேற்ப நம் சொந்த இல்லத்தில் உள்ளோரை அன்பு செய்யவும், மதிக்கவும் இன்று உறுதி பூணுவோமா? மன்றாடுவோம்: தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது சொந்த ஊரினர், உறவினர் உம்மை ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுத்த நிகழ்வு என் கண்களைத் திறப்பதாக. எனது சொந்தங்கள், உறவுகளை நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ளவும், பாராட்டி மதிக்கவும், அன்பு செய்யவும், ஊக்கப்படுத்தவும் எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருட்தந்தை குமார்ராஜா
10 likes
6 shares

More like this