*🇮🇳🌎 வரலாற்றில் இன்று 🌎🇮🇳* *✍️ பதிவு நாள்* *🌎11 - 07 - 2026🌎* *_🔹🔸 SATURDAY 🔸🔹_* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *✍️திருவள்ளுவர் ஆண்டு 𝟮𝟬𝟱𝟳* *🏵️ ஆனி 💎 27ந் தேதி🏵️* *🧿 சனிக்கிழமை 🧿* *_✍️கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன._* *🔷🔸 நிகழ்வுகள் 🔸🔷* 472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். 813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் துறவறம் பூண்டார். 1174 – எருசலேமின் மன்னராக 13 அகவை கொண்ட நான்காம் பால்ட்வின் முடிசூடினான். 1346 – லக்சம்பர்க்கின் நான்காம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1405 – மிங் சீனத் தளபதி செங் ஹே தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார். 1576 – மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1735 – குறுங்கோள் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது. 1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா "ஜே உடன்படிக்கை"யின் படி பெற்றுக் கொண்டது. 1801 – பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். 1804 – ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆரன் பர், முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் அலெக்சாண்டர் ஆமில்டன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இரட்டையர் சண்டையில் ஆமில்ட்டன் படுகாயமடைந்தார். 1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார். 1833 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் தொல்குடியின வீரர் யாகன் கொல்லப்பட்டார். 1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர். 1893 – முதன் முறையாக சப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார். 1893 – நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார். 1895 – லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர். 1897 – சாலொமொன் அந்திரே வடதுருவத்தை ஊதுபை மூலம் அடைய நோர்வேயின் இசுப்பிட்சுபெர்கன் நகரில் இருந்து புறப்பட்டார். இவரது ஊதுபை வீழ்ந்ததில் அவர் இறந்தார். 1919 – நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது. 1921 – செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர். 1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர். 1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: செருமனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர். 1950 – பாக்கித்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது. 1951 – 1939 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த செருமனி மீதான போர் அறிவிப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.[1] 1960 – தகோமி (பின்னர் பெனின்), மேல் வோல்ட்டா (பின்னர் புர்க்கினா), நைஜர் ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக பிரான்சு வாக்களித்தது. 1962 – முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது. 1971 – சிலியில் செப்புச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன. 1973 – பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது. 1978 – எசுப்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர். 1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது. 1982 – இத்தாலி மேற்கு செருமனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது. 1983 – எக்குவாடோரில் போயிங் 737 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.[2] 1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது. 1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியா, ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர். 1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின. 1995 – செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். படுகொலைகள் சூலை 22 வரை தொடர்ந்தது. 2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர். 2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது. 2010 – உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். *🔷🔸 பிறப்புகள் 🔸🔷* 1274 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329) 1710 – அழகுமுத்துக்கோன், முதல் இந்திய விடுதலை வீரர் (இ. 1757) 1732 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (இ. 1807) 1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (இ. 1848) 1857 – சி. சங்கரன் நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1934) 1881 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1966) 1916 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (இ. 2014) 1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000) 1921 – பா. ராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி (இ. 2001) 1925 – குன்றக்குடி அடிகள், தமிழக சமய, இலக்கியவாதி (இ. 1995) 1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2015) 1927 – தியோடோர் மைமான், அமெரிக்க-கனடிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 2007) 1947 – மதன், தமிழக இதழாளர், கேலிச்சித்திர ஓவியர் 1951 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்டக்காரர் (இ. 1996) 1953 – சுரேஷ் பிரபு, இந்திய அரசியல்வாதி 1956 – அமிதவ் கோசு, இந்திய-அமெரிக்க எழுத்தாளர் 1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குநர் 1967 – ஜும்ப்பா லாஹிரி, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் 1989 – டேவிட் ஹென்றி, அமெரிக்க நடிகர் 1990 – கரோலின் வோஸ்னியாக்கி, டென்மார்க்கு டென்னிசு வீராங்கனை *◼️இறப்புக்கள் ◼️* 1882 – பீட்டர் பெர்சிவல், பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர் (பி. 1803) 1909 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1835) 1912 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண்சிகிச்சை நிபுணர், டையாப்ட்டர் அலகை அறிமுகம் செய்தவர் (பி. 1836) 1946 – இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1870) 1956 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1877) 1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் தமிழக புல்லாங்குழல் கலைஞர் (பி.1882) 2003 – பீசம் சானி, இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் (பி. 1915) 2009 – ஜி சியான்லின், சீன மொழியியலாளர் (பி. 1911) 2015 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (பி. 1951) *🌎சிறப்புநாள்🌍* உலக மக்கள் தொகை நாள் #உண்மையை அறிவோம் #😎வரலாற்றில் இன்று📰
10 shares

More like this