S.ANTHONY✝️YESUMARY
7K views 3 hours ago
*புனித அன்னாளை நோக்கி வேண்டிக்கொள்ளும் ஜெபங்கள்.* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿 *புனித அன்னாளை நோக்கி நவநாள் செபம்:* ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸 மாட்சிமிக்கப் புனித அன்னாளே, உம்மை நோக்கி அழைப்பவர்களை இரக்கத்தோடு காண்பவரே, துன்பப்படுபவர்களை அன்பு செலுத்துபவரே, என் பாரமானத் துன்பங்களின் சுமையைச் சுமப்பவரே, நான் இப்போதுள்ள என் தேவைகளுக்காக உமது காலடியில் மண்டியிட்டு, உமது சிறப்பானப் பாதுகாப்பின் கீழ் தாழ்மையுடன் மன்றாடுகிறேன். இவற்றை இயேசுவின் அரியணை முன் வைக்கும்படி உமது மகளான புனித கன்னி மரியா வழியாகப் பரிந்துரை செய்தருளும். (உங்கள் விண்ணப்பங்களை இப்போது மௌனமாகக் குறிப்பிடவும்) எனது விண்ணப்பங்கள் நிறைவேறும் வரை உமது பரிந்துரையை நிறுத்திவிடாதேயும். எல்லாவற்றிற்கும் மேலாக, நானும் ஒரு நாள் இறைவனை நேருக்கு நேராகச் சந்தித்து, உம்மோடும், உமது மகள் மரியாவோடும், மற்ற எல்லாப் புனிதர்களோடும், வானகத் தூதரணிகளோடும் எக்காலமும் அவரைப் புகழ்ந்து பாட உமது அருளைத் தந்தருளும். ஆமென். இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக… மாட்சிமிக்கப் புனித அன்னாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, புனித கன்னி மரியாவே, புனித அன்னாளே, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென். மாட்சிமிக்கப் புனித அன்னாளே, எங்களுக்காகப் பரிந்துரை செய்தருளும். *🙏🏻ஆமென்.🙏🏻* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿 *புனித அன்னாளை நோக்கி செபம்:* ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️ மிகவும் தூய்மையும், இரக்கமும், அனுக்கிரகமும் நிறைந்த புனித அன்னாளே! தேவ மாதாவின் தாயே! நீர் இறைவனால் எத்துணை அன்பு பெற்றிருக்கிறீர்! நீர் கேட்கும் மன்றாட்டை அவர் தள்ளிப் போடுவதில்லை என்று அறிந்திருக்கிற நாங்கள், உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். உம்மால் உலகில் நடந்த புதுமைகளுக்குக் கணக்கில்லையே! இறை அருளை தாராளமாகக் கொண்ட புனித அன்னையே! நாங்கள் மெய்யான தம்பதியராய் நடந்து, வாய்க்காலோரத்தில் நடப்பட்ட மரம் போலக் குடும்ப வாழ்வில் நற்கனி தந்து, எங்கள் துன்பங்களில் ஆறுதலடைந்து, பெருமை கொண்டு, எங்களுக்கு ஆண்டவர் தந்த பிள்ளைகளை நன்னெறியில் நடத்தும் வரத்தை நாங்கள் அடையச் செய்தருளும். நாங்கள் குடும்ப வாழ்வில் ஒரு மனப்பட்டு அண்டை வீட்டாரோடு நட்புறவில் வாழச் செய்தருளும். மரியாதையும், நற்பெயரும், ஒருமைப்பாடும், குடும்ப வாழ்வில் பயபக்தியும், ஒடுக்க வணக்கமும் நாங்கள் பெறச் செய்தருளும். எங்கள் பிள்ளைகள் இறையன்பைக் கூறவும், நாங்கள் அறிவிலும் தேவ ஆசீர்வாதத்திலும் உயரவும் செய்தருளும். அன்றாட உணவை நாங்கள் உட்கொண்டு பசாசினாலும், பொல்லாத மனிதராலும் நாங்கள் வெல்லப்படாதிருக்கப் பண்ணியருளும். எங்கள் வீட்டையும் அதிலுள்ளதையும் அக்கினிக்கும், வெள்ளத்திற்கும், திருடருக்கும் தப்பித்துவிட ஆண்டவரை மன்றாடுகிறோம். கர்த்தர் பட்டணத்தை காக்காவிடில் சாமக்காரன் வீணாய் விழித்திருப்பானல்லோ? தேவபக்தியும், உண்மையும், கீழ்ப்படிதலுமுள்ள ஊழியர்களை நாங்கள் அடையவும், எங்கள் பிள்ளைகளுக்குச் சரியான சேர்க்கை சேரவும் எங்களுக்காக மன்றாடும். எங்கள் உபத்திரவங்கள் இலேசாகவும் நாங்கள் நித்தியமானவைகளை விரும்பவும், எல்லா திண்மைக்கும் வேராகிய பண ஆசையில் நின்று நீங்கவும் பண்ணியருளும். மகா உன்னதமான வரப்பிரசாதங்களை அடைந்த புனித அன்னாளே! நாங்கள் தேவ வரத்துக்கு ஏங்கி நிற்கப் பண்ணியருளும். நாங்கள் தேவ காரியங்களை விரும்பி பாரிய பக்தியைக் கொண்டு வாழ மன்றாடும். நன்மைகள் எல்லாம் கொண்ட தேவனை நாங்கள் அண்டி அவரால் கீர்த்தி பெற்று உய்யப் பண்ணியருளும். *🙏🏻ஆமென்.🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
84 likes
65 shares

More like this