sakthi m
547 views • 1 days ago
#📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #💪தி.மு.க #🚹உளவியல் சிந்தனை
உண்மையிலேயே காமராசர் ஆட்சியத்தான் கொண்டு வந்துட்டார் தூமசத்தி
காமராஜர் ஆட்சி என யாரை கேட்டாலும் சொல்கிறார்கள் அக்காலத்தில் மக்கள் பட்ட துன்பங்கள் அறுபது வயது ஆனவர்களிடம் அதுவும் தென்தமிழகத்தில் கேட்டால் தெரியும் கூலு இருக்காது குடிக்க தண்ணீர் இருக்காது மின்சாரம் இருக்காது சாலை வசதிகள் இருக்காது வாகனங்கள் இருக்காது வேலையில்லை இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலி கருவேலம் விறக வெட்டி மக்கள் பிழைத்தார்கள் கூலு கூட மூன்று வேளை கிடைக்காது அப்புறம் எப்படி அதை பொற்கால ஆட்சி என சொல்ல முடியும்.
இதுபற்றி கவிதை நடையில் ஒரு பதிவு ஏற்கனவே போட்டுள்ளேன்.
பொற்கால ஆட்சியில்?
பிறந்தேன் அந்த கிராமத்தில்
கற்கால மனிதர்கள் போல
கண்டேன் பல காட்சிகளை
ஊரில் ஒரு கிணறு
ஊரும் தண்ணீர் மிக குறைவு.
ரேசன் அரிசி போல நித்தம் ஒரு
பானை மட்டும்.
ஒரு பானை தண்ணீரும் பட்டியல் சாதிக்கு
கொடுப்பதில்லை.
இதை கேட்க அப்போது எவருக்கும்
துணிச்சல் இல்லை
தீட்டு பட்டுமாம் தெய்வ குற்றம்
வந்துடுமாம்
பாவ பட்ட மக்கள் அங்கே பரிதாபமா
நிற்பார்கள்.
அம்மாவாசை மட்டும் தான் அரிசி சோறு
பார்ப்பார்கள்.
நல்ல நாள் மட்டும் தான் நாக்கு ருசி
சாப்பாடு.
சாலை வசதி இல்லை சாப்பாட்டுக்கே
வழியே இல்லை
ஆரம்ப பள்ளி உண்டு அதற்கு மேலே கல்வி இல்லை
மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் தான்
மாணவர்கள் படிப்பார்கள்.
கார் இல்லை சைக்கிள் இல்லை கரண்டு
இல்லை தெருவிளக்கு இல்லை.
இது போன்ற ஆட்சியை எப்படி சொல்வது பொற்கால ம் என்று என இன்னும் நிறைய எழுதி உள்ளேன்.
அணைகள் கட்டினார் தொழிற்சாலை கொண்டு வந்தார் என்பார்கள் அதில் பெரும்பாலானவை ஒன்றிய அரசு நிறுவனம் அதில் வேலை செய்பவர்கள் எல்லாம் தமிழர்களா இல்லை
அணைகள் கட்டினார் தான் இல்லை என சொல்லவில்லை கலைஞர் பல அணைகள் கட்ட வில்லையா பள்ளிக்கூடம் திறந்தார் என்பார்கள் பல கல்லூரிகளில் கலைஞர் எம் ஜி ஆர் திறக்க வில்லையா.
ஊழல் இல்லாத ஆட்சி என்பார்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதிய ஒரு டைரியை நண்பர் ஒருவர் தொடர்ந்து பதிவிடுவார் அக்காலத்தில் கூட பணம் கொடுத்து காரியம் சாதித்தார்கள் என்று ஓட்டுக்கு இப்போது காசு கொடுக்கிறார்கள் என்பார்கள் அண்ணா கலைஞர் எல்லாம் தோற்கடிக்க ஐந்து ரூபாய் சில்வர் குடம் தந்தார்கள் என்பார்கள் இதுபோன்ற முறை கேடு எப்போதும் நடந்து உள்ளது.
அப்போது இருந்தவர்கள் பண்ணையார்கள்
அவர்கள் ஊழல் செய்தால் தெரியாது அதன் பிறகு வந்தவர்கள் ஏழ்மை நிலையில் பொருப்புக்கு வந்து கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்த்ததால் தெரிந்து விட்டது.
கலைஞர் எம் ஜி ஆர் காலத்தில் தான் ஏழை மக்களிடம் பணம் கைக்கு வந்தது வேலை வாய்ப்பு கல்லூரி என உயர்ந்தது ஆடு மாடு மேய்த்தவன் பிள்ளைகள் அமெரிக்க லண்டன் என போனார்கள் சோற்றுக்கு இல்லை என்ற நிலை மாறியது.
18 likes
11 shares