தினமும் சிவபுராணம் படித்தால் ??? முதலில் சிவபுராணம் என்பது ஏதோ சிவத்தின் புராணத்தை கூறுவது இல்லை .. அது நம் புராணத்தை நமக்கே எடுத்து கூறுகின்றது .. அப்படி கூறுவதால் ?? நான் பெரியவன் ?? சிறியவன் ?? அறியாதவன் ?? போன்ற பொய்யெல்லாம் விலக துவங்கும் .. நாம் இப்போது மனிதன் போல தெரிவதால் நாம் மனிதன் அல்ல என்ற மெய்யும் .. எல்லா வகையான பூச்சி , புழு , மிருகம் போன்று எல்லாம் வாழ்ந்து பார்த்து !! அந்த குணங்கள் கொஞ்சம் அடக்கி இருப்பதால் .. மனிதன் ஆக கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்ட .. மிருக குணம் இன்னும் இருக்கும் படைப்பே நாம் என்றே நமக்கு தெளிவும் !! இறையின் கருணை உணர ஓர் வழிகாட்டியாக .. ஊரும் , உலகமும் பயமுறுத்தும்படி இறைவன் இல்லை என்ற தெளிவும் .. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், இறைவன் நம்மோடு இருந்து பேரன்போடு பெருங்கருணை புரிகிறான் என்ற அந்த நிகழ்வை உணரும்போது எல்லாம் இறையையும் உணரும் தன்மை பெறவும் !! புரியவில்லையா ?? உதாரணமாக , " வேகம் கெடுத்து ஆண்ட !! " என்ற வரியை எடுத்துக்கொள்வோம் .. சில நேரம் எங்கோ நம் போக தீட்டமிட்டு அதில் ஏதோ தடங்கல் வந்துவிட்டால் முடங்கி போய் புலம்ப தொடங்கிவிடுவோம் !! நாம் வேகமாக போய் !! ஏதோ சிக்கலில் சிக்க கூடாது என்று .. நமக்கான சூழ்நிலை அமைத்து .. நம் வேகத்தை தடுத்து .. நமக்கானதை மிக சரியாக தரும் அற்புதத்தை அனுபவிக்கும் போது .. இறைவன் நம்மை கவனித்து , நமக்காக எதையெல்லாம் செய்து , நம்மையும் அளவுக்கு மீறிப்போய் எதிலோ சிக்குவதில் இருந்தும் தடுத்து , காத்து அருளும் கருணையை மிகச்சரியாக உணர இந்த அருள் நிறைந்த வரியை நாளும் படிக்கும் போது !! நம்முள்ளே எது நடந்தாலும் !! நடக்காவிட்டாலும் !! அதில் ஓர் தெளிவான மனநிலை வர சிவபுராணம் படிக்கலாம் தானே !! இதுபோல ஒவ்வொரு வரியும் .. நம் வாழ்வில் நடந்து , நாம் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களுக்கு தெளிவை தருகின்றது .. முதலில் தினம் படிக்க துவங்கும் முன்னே !! கேட்க துவங்குங்கள் .. அப்படியே மேலோட்டமாக பல்வேறு நினைவுகள் உடன் கேட்க துவங்கி .. ஒவ்வொரு நாளும் திருப்பி , திருப்பி கேட்க்கும்போது .. அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் , உங்களுள் பல்வேறு உணர்வுகளாக உங்களை ஆளுமை செய்து , உங்களுள் ஓர் அமைதியான தெளிவை தர துவங்கும் !! எங்கோ இறைவன் ?? யாருக்கோ வந்தான் இறைவன் ?? அவர்களுக்கே அருள்வான் இறைவன் ?? போன்ற பொய்யான உலக மாயாஜால சொற்கள் கடந்து .. என்னோடு .. என்னுள் என்னைசுற்றியும் .. இப்போதும் , எப்போதும் இறைவன் உருவம் கடந்த பேராற்றலாய் இருந்துகொண்டே இருக்கிறான் .. என்ற மெய்யை .. நம் உளமார , ஆழ்ந்து அனுபவிக்க துவங்கிவிடுவோம் தானே .. இப்படி எதிலோ எப்போதோ சிறிது நேரம் அனுபவிக்க துவங்கி .. எப்போதும் எதிலும் அனுபவிக்கும் தன்மைக்கு நம்மை முன்னேற்றி கொண்டு செல்ல வல்லது சிவபுராணம் ஆகும் !! தினமும் சிவபுராணத்தை உண்டு விடுங்கள் !!?? கண்களால் படித்து உண்டாலும் சரி !! காதுகளால் கேட்டு உண்டாலும் சரி !! நாவால் படித்து பொருளை சுவைத்து உண்டாலும் சரி !! நினைவால் நினைந்து உண்டாலும் சரி !! எதை உண்டாலும் கழிவாய் வெளியேற்றும் உடலில் .. இந்த சிவபுராணத்தை உண்டால், மனதில் உள்ள கழிவு குப்பைகளை வெளியேறி .. அகத்தில் தெளிவு என்னும் ஞான விளக்கு சுடர்விடும் .. எத்தனையோ தினமும் உண்கின்றோம் !! அதில் எல்லாம் எப்போதும் கிடைக்காத ஒன்று .. சிவபுரணானத்தை உண்ண சித்திக்குமே .. வாழ்த்துக்கள் சொல்லியவனே !! எழுதி !! சொல்லாதே சொல்கிறான் !! நம் புராணத்தை நமக்கே .. அனுபவியுங்கள் அவனை சொல்லாய் !! பொருளாய் !! உணர்வாய் ........... திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா #சிவ சிவ #🙏 ஓம் நமசிவாய #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
16 likes
8 shares

More like this