Varahi
#கிருத்திகை
முருகனுக்கு
அரோகரா.!
1
படம்:பராசக்தி
பாடல்:ஓ..ரசிக்கும்
சீமானேவா.எ.மெட்டு.
🦚
ஓம்எனும்
பொருளேவா
தினமும்உனை
நினைந்து
உள்ளத்தில்உருவம்
அமைப்போம்-திரு
முருகன்எனும்
பொழுது
உருகும் விதத்தில்நெஞ்சம்
ஆறுபடை வீடு
அறிவோம்.!
(ஓம் எனும்..)
வடிவேலும்
துள்ளிவரக்கண்டு-
அழகன்ஆடிவரப்
புள்ளிமயில்உண்டு-
கந்தன்
ஈடில்லாமயிலழகில்
களித்து
மனம்மகிழ்ந்து
ஆனந்தம்
கொள்ளுவீர்
தினமே.!
(திருமுருகன்..)
தேவாரம்
திருப்புகழைப்
பாடி-
இன்ப வாழ்வில்
மிதந்தவர்கள்
கோடி-
பக்திப்
பாடல்களினாலே
பெறும்
சக்தியைத் தினம்
நினைந்து
முக்தியைநீ
நாடு மனமே.!
(திருமுருகன்..)
2
படம்:தங்கமலை
ரகசியம்.
பாடல்:
அமுதைப்பொழியும்
நிலவே.எ.மெட்டு.
🦚
வடிவேல்தாங்கிய
முருகா-நீ
அடியன்முன்
வராததேனோ.!
அடியன்முன்
வராததேனோ.?
(வடிவேல்..) ஓங்கிடும்திருப்புகழ்
ஆசையினாலே
ஏங்கிடும்மைந்தனைப்
பாராய்.!
குறைதனைநீக்க
நிறைமுகம்ஆறும்
விரைந்தெனைக்காக்க
வேலுடன்இன்று.!
(அடியன்முன்..)
திருவடி நானும்
தீண்டிய பின்னே
சிறியனை
வெறுத்திடலாமா.?
அருள்வாய்செந்தமிழ்
அழகுடன்மயிலில்
இருபால்தேவியர்
இருந்தெனைவாழ்த்த.!
(அடியேன்முன்.)
3
படம்:பாதகாணிக்கை
பாடல்:எட்டடுக்கு
மாளிகையில்.!
🦚
குன்றுகளில்
ஆடிவரும்
குறைதீர்க்கும்
என் குமரன்
குன்றை விட்டு
வருவானடி-இன்று
குரல் கேட்டு
வந்தானடி.!
(குன்றுகளில்..)
துயரோடும்
வாழ்வில் என்று
உயர்வோடு
வந்த என்னை
உளமார
வைத்தானடி-
கண்ணில்
ஒளியேற
விட்டானடி.!
(குன்றுகளில்..)
மனதில்
உண்மை வைத்து
மலைபோல்
அன்பைவைத்து
இதயத்தில்
நின்றானடி-வேலன்
விளையாடி
வந்தானடி.!
(குன்றுகளில்..)
வேல் மயில்
உள்ளவரை
வினைதீர்க்க
யார்க்கும்எந்த
நேரத்திலும்
வருவானடி-கந்தன்
காத்தணைத்து
மகிழ்வானடி.!
(குன்றுகளில்..)
🦚🙏🦚
🦚
முருகா முருகா
🦚🙏🦚