VRChandrasekaran.
1K views • 12 days ago
*இறந்தவர்களுக்கு ஏன் சடங்குகள் செய்கிறார்கள் என்ற காரணம் தெரியுமா* ....?
🏃🏼♂️❌🏃🏼♂️❌🏃🏼♂️
தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் உறவினர்கள் இறப்பின் போது கலந்து கொள்ளுங்கள்.....
😟😯😟😯😟
இந்து மதத்தில் ஒருவர் இறந்த பிறகு அவருக்கு சில குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படும். இதனை இறுதிச் சடங்கு என்கிறோம். இறந்தவர்களுக்கு அனைவருக்கும் இந்த சடங்குகள் செய்யப்படுவதை நாம் பலமுறை பார்த்திருந்தாலும் அந்த சடங்குகள் எதற்காக செய்யப்படுகின்றன? இவற்றிற்கு என்ன காரணம்? என யாரும் தெரிந்து வைத்திருப்பது கிடையாது. ஒருவர் இறந்த பிறகு செய்யப்படும் மிக முக்கியமான 5 சடங்குகள் உள்ளன. இந்த சடங்குகளுக்கு பின்னால் பல ஆன்மீக மற்றும் அறிவியல் காரணம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இறுதிச் சடங்குகள் என்பது ஏதோ மூடநம்பிக்கை அல்ல அது ஒரு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை, மீண்டும் அந்த உடலுக்குள் வரவிடாமல் தடுக்கும் மாபெரும் பிரபஞ்ச ரகசியம் ஆகும். மனிதன் வாழும் போது தன் உடலைத் தான் என்று நம்பி ஏமாறுகிறான். இறந்த பிறகும் அதே உடலைச் சுற்றி வந்து அழுகிறான். அவனது கட்டைவிரலைக் கட்டி, வாயை மூடி, நெற்றியை கட்டி, கடைசியில் உடலையே எரித்துச் சாம்பலாக்குவது ஏன் தெரியுமா? ‘உன் ஆட்டம் முடிந்தது, கிளம்பு’ என்று அந்த ஆன்மாவை உலக மாயையில் இருந்து விடுவிக்க நாம் செய்யும் ஆன்மீகத் தந்திரம் அது.
இறுதிச் சடங்கின் போது செய்யப்படும் இந்த 5 சடங்குகள் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவமாகவும், பிரபஞ்ச ரகசியத்தை உணர்த்தும் செயலாகவும் கருதப்படுகிறது. இறுதிச்சடங்கின் போது இந்த சடங்குகள் எதற்காக செய்யப்படுகின்றன என்ற காரணம் இதவரை உங்களுக்கு தெரியாது என்றால், இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
இறுதிச்சடங்கின் போது செய்யப்படும் 5 விஷயங்களும், காரணங்களும் :
1. இறந்தவர்கள் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்?
உயிர் பிரிந்த உடனே உடலின் துவாரங்கள் வழியாக பிரபஞ்சத்தின் அசுத்தக் காற்றும் நுண்கிருமிகளும் உள்ளே புகுந்து, உடல் அழுகுவதன் வேகத்தை அதிகரிக்கும். அதை தடுப்பதற்காகவே இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது.
2. இறந்தவர்களின் கால் கட்டைவிரலை கட்டுவது ஏன்?
மனித உடலின் பிராண சக்தி வெளியேறும் கடைசி வாசல் பாதத்தின் கட்டைவிரல். உயிர் பிரிந்த பிறகும் எஞ்சி இருக்கும் காந்த அலைகள் (Magnetic Fields) வழியே, வேறு ஏதேனும் துர்சக்திகள் உடலுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த பிரபஞ்ச மின்சுற்றை (Energy Circuit) தக்க வைப்பதற்காக இந்த ஆன்மீகக் கட்டு போடப்படுகிறது.
3. இறந்தவர்களின் நெற்றியில் 1 ரூபாய் நாணயம் வைப்பது ஏன்?
நெற்றியில் நாணயம் (ஆக்ஞா சக்கரம்) புருவ மத்தியில்தான் ஆன்மாவின் முதன்மைச் சக்கரமாக ஆக்ஞா உள்ளது. உடல் குளிர்ந்து போகும் போது, அந்த சக்கரத்தில் இருக்கும் எஞ்சிய ஆற்றலை ஒரு உலோக நாணயம் கொண்டு அழுத்தி, ஆன்மா மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய ஆசைப்படுவதைத் தடுத்து, அதை மேல்நோக்கிப் பயணிக்க வைக்கும் உத்தி ஆகும்.
4. இறந்தவர்களின் வாயில் அரிசி (வாய்க்கரிசி) போடுவது ஏன்?
இது பசிக்கு அல்ல. பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் (Earth Element) கடைசிப் பிரதிநிதித்துவம் அது. “இந்த மண்ணில் நீ உண்ட உணவு முடிந்தது. இனி இந்த உடலுக்கு எந்த தேவையும் இல்லை” என்று அந்த ஆன்மாவிற்கு உணர்த்தும் விடைபெறுதல் நிகழ்விற்காக தான் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
5. இறந்தவர்களை எரிப்பதா? புதைப்பதா? எது சரியான முறை?
ஆதிகாலத்தில், சித்தர்களும் ஞானிகளும் உடலை இயற்கையோடு சேர்க்க புதைக்கும் முறையை கையாண்டனர். காரணம், அவர்களின் உடல் தியானத்தால் புனிதமடைந்தது என்பதால். ஆனால் சராசரி மனிதர்களுக்கு எரிப்பதே மிகச் சரியானது. மனிதன் தன் உடலின் மீது அதிகப் பற்று வைத்திருப்பான். உடலைப் புதைத்தால், ஆன்மா அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வரும். ஆனால், உடலை எரியூட்டிச் சாம்பலாக்கும் போது, “நம் கூண்டு அழிந்து விட்டது” என்பதை ஆன்மா நேரடியாகப் பார்த்து, உடனடியாக தன் அடுத்த பிரபஞ்ச பயணத்தை தொடங்குமாம்.
பற்றுக்கள் நீங்கியது என்று தெரிந்து கொண்டு விலகிச் சென்று விடும்.
தெரிந்து கொள்ளுங்கள்.....
🙏🙏🙏🙏🙏 #ஆன்மீக சிந்தனை💐 #அர்த்தமுள்ள இந்து மதம்💐 #ஓம் நமசிவாய💐 #தெரிந்து கொள்வோம்💐 #பொது அறிவுத் தகவல்கள்💐
15 likes
8 shares