கொளத்தூர்ல விழுந்தா ஈவிஎம் கோளாறு... சேப்பாக்கத்துல ஜெயிச்சிட்டா அது மக்கள் போட்ட ஓட்டா? தோத்துட்டா மக்கள் தீர்ப்பு கசக்குது, ஜெயிச்சா மட்டும் சிம்மாசனம் சிரிக்குது! தப்பை திருத்திக்க திராணி இல்லாதவங்கதான் மிஷின் மேல பழியை போடுவாங்க! மக்களோட தீர்ப்பை மதிக்க தெரியாதவங்களோட புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதுதான் எங்களோட வேலை! அரசியல்ல தோத்துட்டா அதை மனசாட்சியோடு ஏத்துக்கிட்டு, எங்க தப்பு நடந்துச்சுன்னு யோசிச்சு திருத்திக்கிறதுதான் ஒரு உண்மையான ஜனநாயகக் கட்சியோட அழகு. ஆனா, போன எலெக்‌ஷன்ல படுதோல்வி அடைஞ்சதுக்கு... அப்புறமும் திமுக தரப்புல இருந்து வர்ற புலம்பல்களையும், லாஜிக்கே இல்லாத வாதங்களையும் பார்த்தா சிரிப்புதான் வருது.... கொளத்தூர்ல ஸ்டாலின் தோத்ததுக்கு ஈவிஎம் மிஷின் கோளாறுதான் காரணமாம்! மக்கள் நம்ம மேல கோவத்துல இருக்காங்கன்னு உண்மையை ஒத்துக்க தைரியம் இல்லாம, மிஷின் மேல பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்குறாங்க. "பாஜகவோட பினாமிதான் விஜய்; அவங்கதான் ஈவிஎம்ல அவுட் பண்ணி விஜய்யை ஜெயிக்க வச்சாங்க"ன்னு வேற லெவல்ல கதையை விடுறாங்க. கொளத்தூர்ல ஸ்டாலினை வீழ்த்தத் தெரிஞ்ச மர்மக் கும்பலுக்கு, சேப்பாக்கத்துல உதயநிதியைத் தோற்கடிக்கத் தெரியலையா? இதுக்கு யார் கிட்டயாவது பதில் இருக்கா? ஒருவேளை பாஜகவே நினைச்சு எல்லாத்தையும் மாத்திருந்தா, அவங்க கட்சி தமிழ்நாட்டுல வெறும் ஒரு சீட்டோடயா நின்னுருக்கும்? தங்களுக்குக் கிடைச்ச கொஞ்சநஞ்ச சீட்டுகளைத் தாண்டி அவங்களும் படுதோல்வி அடைஞ்சதை இந்த விசித்திரமான தியரி வச்சு எப்படிங்க நியாயப்படுத்துவீங்க?.... முன்னாடி இவங்க ஆட்சியைப் பிடிச்சப்போ இதே ஈவிஎம் மிஷின் வழியாத்தானே ஜெயிச்சு அரியணை ஏறினாங்க? அப்போ கரெக்டா வேலை செஞ்ச அதே மிஷின், இப்போ தோத்ததுக்கு அப்புறம் மட்டும் திருடிடுச்சா என்ன? இந்த மாதிரி இரட்டை வேடம் போட்டுட்டு, தோல்வி பயத்தால புனையப்படுற பொய்களை வச்சு தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நெனைச்சா அது வெறும் பகற்கனவுதான். மக்களைப் பத்தித் துளியும் புரிஞ்சுக்காம, எப்பவும் மத்தவங்க மேல குறை சொல்லிட்டே இருந்தா அரசியல்ல காலத்துக்கும் ஜெயிக்கவே முடியாது. விஜய்யோட வளர்ச்சியைப் பார்த்துக் கலங்குறவங்களும், இழந்த இடத்தைத் தாங்கிக்க முடியாதவங்களும் இப்படித்தான் புலம்பித் தீப்பாங்க. ஆனா, மாற்றம் தேடி நிக்குற யங் ஜெனரேஷன் இதையெல்லாம் நம்ப தயாரா இல்ல. தப்பு எங்கன்னு சுயபரிசோதனை பண்ணிக்காம, சும்மா சாக்குபோக்கு சொல்லிட்டே இருந்தா மக்கள் உங்களை ஓரம் கட்டுறது உறுதி. அரசியல்னா என்ன? மக்களோட மனசை வெல்றதுதான்! அதை விட்டுட்டு டெக்னாலஜி மேலேயும், எலெக்‌ஷன் கமிஷன் மேலேயும் பழி போடுறது சுத்தமான கோழைத்தனம்..... இப்படியெல்லாம் பேசிட்டுத் திரிஞ்சா காலப்போக்கில் மக்கள் உங்களை முழுசா மறந்துருவாங்க. இனியாவது அந்தப் பழைய பல்லவியைக் தூக்கி எறிஞ்சுட்டு, புதுசா யோசிச்சு களத்துல இறங்குங்க. அப்படி இல்லன்னா தமிழ்நாட்டு அரசியல்ல நீங்க நினைக்கவே முடியாத அளவுக்குப் பெரிய சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்!.... ##திருட்டு திமுக #அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் #😊Positive Stories📰 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️
12 likes
2 comments 14 shares

More like this