More like this
- ⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞நடைமுறை ஆன்மீகம் ==================== 1. காலையில் எவரையும் எழுப்பும்போது வாழ்த்தி எழுப்புங்கள்! மற்ற தவிர்க்க இயலாத கோபதாப சுடுசொற்கள் ஒரு பத்துநிமிடம் கழித்து வைத்துக் கொள்ளுங்கள்! 2. உணவு தயாரிக்கும் போதும் உணவை கட்டிக் கொடுக்கும் போதும் கோபப்படுதல் அபசகுனமாக பேசுதல் தவிர்க்கவும். முடிந்தால் இறைவனின் பேரைச் சொல்லிக் கொண்டே உணவைத் தயாரித்து கட்டிக் கொடுங்கள்! கோபதாப எண்ணம் உணவை விஷமாக்கும்! மனதை பாதிக்கும். 3. குழந்தைகளைத் தூங்கச் சொல்லும்போதும் தீய சொற்களைத் தவிருங்கள். அன்பாக வாழ்த்தி உறங்கச் செய்யுங்கள். எவ்வளவு கோபம் வந்தாலும்! 4. இறைவனின் நாமங்களைச் சொல்லி உறங்கும் பழக்கத்தை நீங்களும் குழந்தைகளும் கடைப்பிடியுங்கள். 5. பிறர் தூங்கும்போது உரக்க ஒலி எழுப்பாதீர்கள். உறக்கம் ஆன்மா இறையுணர்வில் ஒடுங்கி அமைதிகாணும் நேரம். 6. எழுப்பும் போது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் நற்சொற்களைச் சொல்லி எழுப்புங்கள். உங்கள் அர்ச்சனைகளை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தீய அருவருக்கத்தக்க சொற்களை எந்த நேரத்திலும் தவிருங்கள். தீய சொற்கள் வீட்டில் அதிர்வலைகளாக சேமிக்கப்பட்டு வீடு களை இழக்கும். ஏதோ ஒரு மன சோர்வு இறுக்கத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்தும். 7. காலை அந்திப் பொழுதில் விளக்கேற்றி ஓரிரு துதிகளை உரக்கச் சொல்லுங்கள். எந்த மொழி எந்த கடவுள் என்பது முக்கியமல்ல. கீதை திருவாசகம் சஷ்டி கவசம் குர்ரான் பைபிள் ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 8. பாத்திரங்களைக் கழுவும்போது கோபம் எரிச்சலால் அபரிமிதமான ஓசையுடன் கழுவாதீர்கள். கதவுகளை ஓசையோடு திறக்கவோ மூடவோ செய்யாதீர்கள். அந்த தேவையற்ற ஒலி குடும்ப அமைதியை பாதிக்கும்! 9. வாகனங்களை ஓட்டும்போது இன்டிக்கேட்டர் போடாமல் லேன் சேஞ்ச் செய்யாதீர்கள். பல மனங்களின் தேவையற்ற சாபங்களைத் தவிர்க்கலாம். 10. சட்டென்று தோன்றும் பிறரைப்பற்றிய அபிப்ராயத்தின் பேரில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். உங்கள் புரிதல் மாறிய பிறகு குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்! #god2015
- Soul_Edits#OM MURU🙏 #god #god muru #ஓம் முரு #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃#sharechat #முருகன் ஸ்டேட்டஸ்47120
- Udhaya#god's #god's hand leads #God's Words #god's hand leads129
- ⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞🔱காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில்.... ✅சித்திரையில் நான்கு செவ்வாய் கிழமைகள் வந்தால் இரண்டாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும். 5 செவ்வாய் கிழமைகள் வந்தால் மூன்றாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும். ✅மக்கள் பெரிய தாம்பாளங்களில் அம்மனை மூடும் அளவிற்கு பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள். ✅அன்று முழுவதும் மலர்க்குவியலிலேயே அம்மன் இருப்பாள். ஆடி மாதங்களில் சிறப்பான வழிபாடுகள் நவராத்திரி பங்குனி தாராபிஷேகம் போன்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ✅ஆதிசங்கரர் சக்கரத்தை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இக்கோவில் செல்லும்போது ஆகர்ஷண சக்தியை நன்கு நாம் உணரமுடியும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட்டு நலனைப் பெறுகின்றனர். சரும வியாதிகளையும் இந்த அம்மன் குணப்படுத்துகிறார். ✅விவசாயம் தொழில் அபிவிருத்திக்கும் இங்கு வழிபடுகின்றனர். துர்க்கையின் அம்சமாக இவள் விளங்குவதால் கல்வி, வீரம் செல்வம் போன்றவற்றைத் தரக்கூடியதாக இந்த அம்மன் திகழ்கிறாள். காரைக்குடியில் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். #god2016
- ✿્᭄͜͡🇵ᴿᴵᴺᶜᴱˢˢ💜⃝Qυєєиﮩ٨ــﮩ❤️ﮩ💙#விநாயகர் #🙏🪔ஓம் கணபதி போற்றி! விநாயகர் சதுர்த்தி 🪔🙏 #🙏ஓம் விநாயகர் போற்றி 🙏 #vinayagar #god1K652
- Amalraj#Bible Verses In English #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou7827
- ⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை .. அதிகாலையில் நீராடி, வீட்டையும் பூஜை அறையையும் தூய்மைப்படுத்தி, மாக்கோலம் இட்டு, அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். காமாட்சி அம்மனுக்கு மல்லிகை, முல்லை, செம்பருத்தி, ரோஜா அல்லது தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யலாம். நெய்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பாயாசம் அல்லது இனிப்பு வகைகளை நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம். அன்று லலிதா சகஸ்ரநாமம், திரிபுரசுந்தரி அஷ்டகம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, காமாட்சி அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றைப் பாராயணம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். "ஓம் ஸ்ரீ காமாட்சியே நம:" அல்லது "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காமாட்ச்யை நம:" என்ற மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மிகுந்த பலனை அளிக்கும். *வழிபாட்டின் பலன்கள்* - இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்து செல்வ வளம் பெருகும். - திருமணத் தடை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும். - பெண்களுக்கு தீர்க்க சுமங்கல்ய பாக்கியம் கிடைக்கும். - குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் சிறக்கும். - தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். - உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்மிக நலம் மேம்படும். - கடன் சுமைகள் குறைந்து பொருளாதார நிலை உயர்வு பெறும். - பக்தர்களின் நல்ல எண்ணங்களும், தர்மமான வேண்டுதல்களும் நிறைவேறும்.✍🏼🌹 #god2143
- 𐏓⃝🍫─ͣ─🅙─ͥ─ͭ─ͪ─🅺─ͧ─ͫ─ͣ─ͬ🦋➣Ak TNP 💖#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் #🙏கோவில் #god8162
- மணிகண்டன்.ச#முருகா #god #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருக பெருமான்6885
- ⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞கடவுள் கணக்கு நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை! சிறு கதை ஒன்று எனக்கு ஒரு தெளிவினைக் கொடுத்தது. ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3) மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார். சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த் நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார். ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும். இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு *ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு.✍🏼🌹* #god118