-
771 views • 3 months ago
"பொறுமை கடலினும் பெரிது''
எதையும் பொறுமையாக செயல்படுகிறவர்கள் ஒரு செயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள்.
அதுவே பொறுமை இல்லாதவரிடம் அது இருக்காது.. அவர்களால் குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது.
அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தர முடியும்.
ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது அவரின் பொறுமையே !
பொறுமை இல்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களே அதிகம் ..
பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம்.
ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது.
நாமும் நம் மனதை மெல்ல மெல்லத் தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம்.
பொறுமை தான் மனிதனுக்கு மிகவும் தேவை.
பூவுகில் அதுதானே பெரிய சேவை.
சோதனைக் காலம் வரும் போது இன்னும் பொறுமை காப்போம்
சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்
பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு
அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும்.
#பொறுமை
11 likes
11 shares