Makkal Mugam
563 views • 26 days ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் அவர்களின் ஆலோசனையின்படி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் சிவராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாரந்தோறும்
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொள்கின்றனர்.
புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்த மனு விசாரணை முகாம் நடைபெறுகிறது.
இந்த விசாரணையின் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தாமதமின்றி, உடனடியாகத் தீர்வு காண வழிவகை செய்யப்படுகிறது.
காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடப்பதால், பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தயக்கமின்றி எடுத்துக்கூறி விரைவான நிவாரணத்தைப் பெற முடிகிறது.
காவல்துறையின் இந்த மக்கள் நலன் சார்ந்த முயற்சி, ஒட்டன்சத்திரம் வட்டாரப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
15 likes
10 shares