#ஆன்மீக #😍குட்டி கதை📜 *எல்லா கெட்டவர்களும் ஒன்று சேருவது சுலபம் *ஆனால் இரண்டு நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம்* என ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய நீதி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
🌺துரியோதனன் வீழ்த்தப்பட்டான்,
தரையில் கிடக்கிறான், அப்பொழுது பீமன் அவன் தலையை தன் காலால் மிதிக்க முயலுகிறான்.
🌺தர்மன் கூவுகிறான்,
பீமா செய்யாதே அவன் ஒரு சாம்ராட் அரசன், இது சரியல்ல தர்மத்துக்கு உகந்த்து அல்ல என்று....
🌺துரியோதனன் அப்பவும் சளைக்கவில்லை, அவன் முகம்
ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்கிறது,
🌺ஹே கிருஷ்ணா.. தர்மம் தர்மம் என்று பேசும் நீ, உன் கண் காட்டியதால் தானே இந்த பீமன் என்னை தொடையில் அடித்து மரணிக்க வைத்தான், இது தர்மமா?
🌺சூரியனை மறையச் செய்து ஏமாற்றினாய்?
கர்ணனை சூசகமாக கொன்றாய்?
பீஷ்மரை சிகண்டியை முன் நிறுத்திக் கொன்றாய்?
🌺ஓரு யானையை வைத்து துரோணரைக் கொன்றாய்?
இப்பொழுது அவன் என் தலையை மிதிப்பதை கூட நீ பார்த்துக் கொண்டு இருக்ககிராய் என .....
துரியோதனன்...கேட்க
🌺புன் முறுவலுடன் கிருஷ்ணன் பதில் சொன்னான்.
🌺துரியனே, தர்மத்தைப் பற்றிப் பேச உனக்கு அறுகதையே இல்லை, உலகின் மொத்த அதர்மமும் நீ செய்துவிட்டு, இப்ப தர்ம்ம் பற்றிச் சிந்திக்கிறாய், ஏன் என்றால் எல்லாம் இழந்த /துறந்த நிலையில் வரும் ஞானம் இது
🌺ராமனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்பது எங்கள் அவதாரம் பூமியில் தோன்றிய காலத்தின் வேறுபாட்டில் தான்.
🌺இராமனுக்கு எல்லா செயலின் பிறப்பும் சரி, அது செல்லும் வழியும் சரி, அது முடியும் முடிவும் சரி , தர்மம் சார்ந்தே இருக்க வேண்டும்.
🌺ஆனால் நான் இருக்கும் காலம் கலியை தொடும் காலம், இதில் செயலின் பிறப்பு அதன் வழி எப்படி இருந்தாலும் அதர்மம் அழிக்க சில சாணக்கியம் செய்து, அதர்ம வழியையே உபயோகப்ப்படுத்தி பின் தர்ம்ம் ஜெயிக்க வேண்டும் என்பதே,
🌺எல்லா கெட்டவர்களும் ஒன்று சேருவது சுலபம் ஆனால் இரண்டு நல்லவர்கள் ஒன்று சேர்வது கடினம்.
🌺ஆகையால் சில விஷயம் செய்தாக வேண்டிய கட்டாயம் தர்மம் நிலைக்க, ஆதனால் நீ இதைப் பற்றிப் பேசாதே என்றார் ஸ்ரீகிருஷ்ணன்.
--------------------------------------------------------------------------
💐🌹 *சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🏵️💐🌹


