S.ANTHONY✝️YESUMARY
961 views 6 hours ago
இரவு ஜெபம்* எங்களை நேசிக்கும் அன்புத் தந்தையே, எதிர்காலம் என்னவாகுமோ என்ற குழப்பத்திலேயே, ஒவ்வொரு இரவும் சோர்வாக உணர்கிறோம். உம்மை நோக்கி செபிக்க நேரம் ஒதுக்க மறந்துவிடுகின்றோம். கவலைகள் மற்றும் பயங்களால் பாதிக்கப்பட்டுள்ள சமயங்களில் உதவிக்காக யாரை நோக்கி திரும்புவது என்பது எங்களுக்குத் தெரிவதில்லை. கவலைகளால் சூழப்பட்டுள்ள இன்றிரவு நன்றாக தூங்க முடியுமா என்பதே எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எங்களுக்குத் தேவையான காலங்களில், நாங்கள் உம்மைவிட்டு மிகவும் தொலைவில் இருப்பதாக நாங்கள் உணர்ந்தாலும், நீரே அனைத்தும் வல்லவர். எங்கள் அன்றாட, மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் உம்முடைய உதவியை யாசிக்கின்றோம்.எங்கள் உதவிக்காக உம்முடைய தெய்வீக வல்லமையை நாடுகிறோம். அன்புள்ள ஆண்டவரே, இயேசுவே, இன்றிரவு நல்ல ஓய்வையும், நல்ல இரவு தூக்கத்தையும் எங்களுக்கு ஆசீர்வதியும். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உமது உதவி தேவை. மேலும், நீர் தரும் வலிமைக்கும், கடினமான விஷயங்கள் கூட உம்மால் சாத்தியம் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குடும்பத்தையும் எங்கள் வீட்டையும் ஆசீர்வதியும். இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பாக வைத்திரும். உமது தேவதூதர்கள் எங்களைக் காத்து கண்காணிக்கட்டும். நாங்கள் காயப்படும்போது, எங்களுக்கு ஆறுதலாக, நன்றாக உணர எங்களுக்கு உதவி புரியும். அப்பா, எங்கள் வாழ்க்கைக்கான உமது நல்ல திட்டங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்குக் கீழ்ப்படியவும், உம்மை வெகுவாக நேசிக்கவும் அருள் புரியும். விடியலில் நல்ல புத்துணர்ச்சியுடன் எழுந்து, எங்கள் அன்றாட வேலைகளைத் தொடர்ந்து செய்ய அருள் புரியும். ஆமென்! † எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்ச்சியுடன் செபிக்கிறோம், ஆமென்! † இனிய இரவு வணக்கம்! 🌹 கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! † #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
24 likes
9 shares

More like this