இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 08/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 317 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : "அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்." (வெளி 14:10) அன்பான கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகளே, இவ்வசனத்தில் தேவனுடைய கோபாக்கினையானது, அவருடைய கரத்தில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள தண்ணீர், கலப்படம் இல்லாத போதை நிறைந்த மதுபானத்துக்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறது. " நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்தி கெட்டுப் போகும்படிக்கு, இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லோருக்கும் அதிலே குடிக்கக் கொடு," (எரே 25:15,16) என்று தேவாதி தேவன் எரேமியாவிடம் கூறுகிறார். “கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக்குடிப்பார்கள்” (சங் 75:8) என்கிறார் ஆசாப். "துன்மார்க்கன் சர்வ வல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்". (யோபு 21:20) ''கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்து நில், தத்தளிக்கச் செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.”(ஏசா 51:17) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களில், தேவனுடைய உக்கிரமான கோபத்தினிமித்தம் உண்டான நியாயத்தீர்ப்புகளை, கர்த்தருடைய கரத்தில் இருக்கும் பாத்திரத்தில் உண்டான மதுவிற்கு ஒப்பாகச் சொல்லப்படுகிறதை அறிய முடிகிறது. அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அந்திக்கிறிஸ்துவின் முத்திரையைத் தரித்து அவனை வழிபட்டவர்கள் யாவரும் வாதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இதைக் குறித்த எச்சரிப்புகளை கிறிஸ்து இயேசு ராஜாவும் தன் ஊழியத்தில் வெளிப்படுத்தியுள்ளதை சுவிசேஷங்களில் வாசிக்க முடிகிறது. “லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து. எல்லாரையும் அழித்துப் போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்”. (லூக் 17:29,30) சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கப்பட்ட போது "அவற்றிலிருந்து எழும்பிய புகை சூளையின் புகையைப் போல் எழும்பிற்று”. (ஆதி 19:28) அக்கினியினாலும் கந்தகத்தினாலும் உண்டாகும் அழிவைக் குறித்து வெளி 19:20; வெளி 20:10; வெளி 21:8 ஆகிய வசனங்களில் வாசிக்கின்றோம். நரக அக்கினியின் வேதனையை வார்த்தையினால் விவரிக்க முடியாது. வெளி 20:15-ம் வசனத்தை தியானிக்கும் பொழுது நரகத்தைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள அன்பின் தேவன் இரக்கம் செய்வாராக. இந்த வாதைகள் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாக நடக்கும் என்ற கர்த்தருடைய வார்த்தையானது லூக்கா 12:9-ம் திருவசனத்தை நினைவுபடுத்துகிறதாய் உள்ளது. "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவ தூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்” (லூக் 12:9) என்கிறார் அன்பின் ஆண்டவர் இயேசு மகாராஜா. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
17 likes
4 comments 11 shares

More like this