Nethaji
529 views • 16 days ago
#🙏கோவில் #💪இலட்சிய கனவு 💭 #👏Inspirational videos #ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 24, 2026
திருச்சிற்றம்பலம்
*எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறை*
*திருவாசகம் - திருச்சதகம் - அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) பாடின்றிப் பயன் வேண்டுகிறேன் - பதிகம்*
*பாடல்* :
*வருந்துவன்,நின் மலர்ப்பாதம்*
*அவைகாண்பான்; நாயடியேன்*
*இருந்துநல மலர்புனையேன்;*
*ஏத்தேன்;நாத் தழும்பேறப்;*
*பொருந்தியபொற் சிலைகுனித்தாய்!*
*அருளமுதம் புரியாயேல்,*
*வருந்துவன்அத் தமியேன்;*
*மற்றென்னே நான்ஆமாறே?* - 8.005.13
*பொருள்* :
*மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானே நாயை விடக் கீழான நான், உனக்கு மலரிட்டு வழிபடவில்லை; நாத் தழும்பேற உன்னைத் துதிக்கவில்லை. ஆனாலும் உன் திருவடிகளைக் காண ஏங்குகிறேன். நீ உனது அருளமுதத்தை எனக்குத் தந்து ஆட்கொள்ளவில்லை என்றால், துணையற்ற நான் வருந்தி அழிவதைத் தவிர எனக்கு வேறு நற்கதி இல்லை. நீ அருள் செய்யாவிட்டால், நான் உய்வடைவதற்கும் நற்கதி அடைவதற்கும் வேறு வழிதான் என்ன இருக்கிறது? என்று மாணிக்கவாசகர் தம்மைத் தாழ்த்தி, இறைவனின் பெருங்கருணையை வேண்டுகிறார்.*
*திருச்சிற்றம்பலம்*
13 likes
17 shares