*நூற்றெட்டுத்திருப்பதி*
*யந்தாதி-அன்பில்*
பிள்ளைகள் வளர்ந்து அது
அது வேறு வேறு ஊர்களுக்குப் போய் விடுகின்றன.
சில சமயம் அயல் நாடுகளுக்குக் கூட
போய் விடுகின்றன.
பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
பிள்ளைகளுக்கும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
இருந்தாலும் , கிட்டத்திலா இருக்கு ஒரு எட்டு போய் விட்டு வரலாம் என்றால்.
நேரம், பண விரயம், உடல் உழைப்பு என்று ஆயிரம் சங்கடங்கள் வருகின்றன.
வருடத்துக்கு ஒரு முறை வருவதே கடினமாக இருக்கிறது.
ஒரு வழி இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி சென்று பார்த்து கொள்ளலாம் அல்லவா ?
இங்கிருக்கும் ஊருக்கே
இந்த பாடு என்றால், வைகுந்தத்துக்கு ?
ஒரு நடை போயிட்டு வர முடியுமா ?
ஆண்டவனுக்கும் அவன் பிள்ளைகளை பார்க்க ஆசை தான்.
பிள்ளைகளுக்கும் இறைவனை தரிசிக்க ஆசை தான்.
முடியுமா ?
எனவே தான், பெருமாள், பக்தர்கள் இருக்கும்
இடத்துக்கு அருகில் வந்து இருந்து கோவில் கொள்கிறாராம்.
பக்தனுக்கு சிரமம் வேண்டாம். நாம் அவன் பக்கத்தில் வந்து விட்டால், அடிக்கடி வந்து நம்மை பார்ப்பான். நாமும் அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று.
கோவிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் அவன் மனதியிலேயே இடம் பிடித்துக் கொள்ளலாம் என்று ஆண்டவன் நினைத்துக் கொண்டிருப்பானாம்.
நான் சொல்லவில்லை, திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.
பாடல்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல் கிடக்கு
மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனாவான்.
பொருள்
நாகத் தணைக் = ஆதி சேஷனை படுக்கையாக கொண்ட (இடங்கள்)
குடந்தை = திருக்குடந்தை
வெஃகா = திரு வெஃகா
திருவெவ்வுள் = திருவெள்ளுர்
நாகத் தணையரங்கம் = நாகத்தை அணையாகக் கொண்ட திருவரங்கம்
பேர் = திருப்பேரூர்
அன்பில் = அன்பில்
நாகத்தணைப்பாற் கடல் = பாம்பணையில் உள்ள பாற்கடல்
கிடக்கும் = சயனித்து இருக்கும்
ஆதி = மூலப் பொருளான
நெடுமால் = நெடிய மால்
அணைப்பார் = அணைத்துக் கொள்ளும் அன்பர்கள்
கருத்தன் = கருத்தில், மனதில்
ஆவான்= இருப்பான்
அவனுக்கு இருக்க ஆசை உள்ள இடம் அன்பர்கள் மனம்தான்.
அங்கு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து , பாற்கடலில் இருந்து எழுந்து வந்து பக்தன் இருக்கும் இடத்துக்கு அருகில் கோவில் கொண்டிருக்கிறானாம்.
அப்படி அவன் சயனம் கொண்ட இடங்கள் ஏழு
திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் என்ற இந்த ஐந்து இடங்களில் பள்ளி கொண்டிருக்கின்றானாம்.
அப்படி அவன் சயனம் கொண்ட ஏழு இடங்களில் ஒன்றான இடம் அன்பில்.
அது தான் நாம் இன்று பார்க்க இருக்கின்ற இடம்.
நமக்கு வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன.
பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, உறவுகளில் சிக்கல், என்று எவ்வளவோ துன்பங்கள் வருகின்றன.
இந்த ஆண்டவன் நினைத்தால் நமக்கு இந்த துன்பங்களை எல்லாம் நீக்கி எப்போதும் இன்பமாக இருக்க வழி செய்ய முடியாதா ?
எதற்கு இவ்வளவு சோதனை என்று நாம் மனம் நொந்து கொள்வோம்.
தாயின் அன்பும், தந்தையின் அன்பும் வெளிப்படும் விதம் வேறு வேறாக இருக்கும்.
பிள்ளை கீழே விழுந்து விட்டால் , தாய் பதறி ஓடிப் போய் தூக்குவாள் .
தந்தையோ பார்த்துக் கொண்டிருப்பார்.
அவனே எழுந்திரிக்கட்டும்.
வலி தாங்கட்டும் .
அவன் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கிறது.
எத்தனையோ தரம் விழுவான்.
அவனே எழுந்து நிற்கப் பழக வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருப்பார்.
நான் இப்போது தூக்கி
விட்டால், பின் அவன் தானே எழுந்திருப்பது எப்படி என்று அறியாமலேயே போய் விடுவான்.
வலிக்கும் தான், ஆனால் , ஒரு முறை எழ பழக்கிக் கொண்டால், பின் அவன் தன்னைத் தானே பார்த்துக் கொள்வான் என்று தந்தை நினைப்பர்.
பிள்ளை நினைக்கலாம்,
"என்ன தகப்பன் இவன். நான் இவ்வளவு துன்பப் படுகிறேன். பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறானே. இவனுக்கு என் மேல் அன்பே இல்லையா " என்று.
அன்பு இருப்பதால்தான் சும்மா இருக்கிறார் என்பது பிள்ளைக்குத் தெரியாது.
அது மட்டும் அல்ல, பல சமயங்களில் பிள்ளைகள் தந்தையை நினைப்பது கூட கிடையாது.
அவர்களுக்கு அவர்கள் வேலை, குடும்பம், பிள்ளைகள் என்று நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்றோரை நினைக்க நேரம் இல்லை.
அதற்காக பெற்றோர் பிள்ளைகளை நினைக்காமல் இருப்பதில்லை.
பிள்ளை பெருமாள் அய்யங்கார் , பெருமாளை , "தந்தையே" என்று அழைக்கிறார்.
நான் உன்னை நினைக்கவிட்டாலும், நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய் என்று கூறுவதைப் போல.
அது மட்டும் அல்ல, இந்த பிறவிக்கு ஒரு தந்தை இருக்கிறார், எத்தனையோ பிறவிகள்.
என்னவெல்லாமாகப் பிறந்தோமோ ? பிறக்க இருக்கிறோமோ ? அங்கெல்லாம் யார் தந்தை ?
ஆண்டவன் தான் எப்போதும் தந்தையாக இருப்பவன் என்று கூறுகிறார்.
அவன் தான் ஆதி முதலே தந்தை.
அவனை தந்தை என்று அழைப்பதன் மூலம், அவனுடைய குடும்பத்தில் தானும் ஒருவன் என்று நிலை நிறுத்திக் கொள்கிறார்.
அவனுடைய திருவடிகள் மேல் அன்பு செலுத்துவதைத் தவிர காசு, பணம், அதிகாரம் என்று சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் ஒரு பயனும் இல்லை என்கிறார்.
பாடல்
போற்றி செயவோர்
குடைக்கீழ்ப்பொன்னாடு
மிந்நாடு
நாற்றிசையுமாண்டாலு
நன்கில்லை - தோற்றமிலா
வெந்தையன்பிலாதியிணைத்தாமரையடிக்கே
சிந்தையன்பிலாதார்சிலர்.
சீர்பொ பிரித்த பின்
போற்றி செய ஓர் குடைக் கீழ் பொன்னாடும் இந்நாடும்
நான்கு திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை - தோற்றமிலா
எந்தை அன்பில் ஆதி இணை தாமரை அடிக்கே
சிந்தை அன்பில்லாதார் சிலர்
பொருள்
போற்றி செய = எல்லோரும் போற்றும் படி
ஓர் குடைக் கீழ் = ஒரே பெரிய அரசாக, சாம்ராஜ்யமாக
பொன்னாடும் = மேல் உலகும்
இந்நாடும் = பூவுலகம் ஆன இந்த பூமியையும்
நான்கு திசையும் = நான்கு திசையும் சூழ்ந்த நிலப் பரப்பை
ஆண்டாலும் = ஆட்சி செய்யும் அதிகாரம் இருந்தாலும்
நன்கு இல்லை = நன்மை இல்லை
தோற்றமிலா = தோற்றம் என்பது இல்லாத
எந்தை = என் தந்தை என்பதன் மரூஉ
அன்பில் = திரு அன்பில் என்ற தலத்தில் பள்ளி கொண்டிருக்கும்
ஆதி = அனைத்துக்கும் ஆதியான அவனின்
இணை = இணையான இரண்டு
தாமரை = தாமரை போன்ற
அடிக்கே = அடிகளுக்கே
சிந்தை = மனதில் கொள்ளாத
அன்பில்லாதார் சிலர் = அன்பில்லாதர் சிலர்
இறைவனை யார் நினைக்க மாட்டார்கள் என்றால், மனதில் அன்பு இல்லாதவர்கள் நினைக்க மாட்டார்களாம்.
இறைவனை நினைக்க படிக்க வேண்டாம், ஞானம் வேண்டாம், அன்பு இருந்தால் போதும்.
அன்பு இருந்தால் அவன் நினைவு வரும்.
அவனை நினைக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்,
அவன் உங்கள் மனதில் இருக்கிறான் என்று தானே அர்த்தம்.
அதுக்குத்தானே அவன் இந்த பாடு படுகிறான்.
அன்பு கொள்ளுங்கள். ஆண்டவன் உங்களைத்
தேடி வருவான். 🚩🕉🪷🙏🏼 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள்
![🙏கோவில் - [od-ಖl : .rcri எப [_{4 திருப்ண Hcon ە வழ்அரஆம் ~பி்சந்தா் ;11][_,[/+|]1;]1[ Bsincು ಲcuer [od-ಖl : .rcri எப [_{4 திருப்ண Hcon ە வழ்அரஆம் ~பி்சந்தா் ;11][_,[/+|]1;]1[ Bsincು ಲcuer - ShareChat 🙏கோவில் - [od-ಖl : .rcri எப [_{4 திருப்ண Hcon ە வழ்அரஆம் ~பி்சந்தா் ;11][_,[/+|]1;]1[ Bsincು ಲcuer [od-ಖl : .rcri எப [_{4 திருப்ண Hcon ە வழ்அரஆம் ~பி்சந்தா் ;11][_,[/+|]1;]1[ Bsincು ಲcuer - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_902904_164c4046_1781806901247_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=247_sc.jpg)


