saravanan.
671 views • 5 days ago
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam. மகிழ்வித்து மகிழ்
அதிசயமெனச் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. என் ஆன்மா, மனம், ஆவி ஒரே நேர்க்கோட்டில் இயங்குவதுதான் என் தனித்துவம். அந்தப் பிணைப்பின் சாட்சியே என் எளிமை. ஆனால், சில நேரங்களில் உலகம் அதைத் தாழ்வு மனப்பான்மையெனத் தவறாகப் புரிந்துகொள்கிறது...
ஒழுக்கம் என்ற பெயரில் உண்மையை மூடி மறைக்கும் முகமூடிகள்,மனிதத்தின் முகத்தை மறைத்துவிடுகின்றன.
வெளியில் நற்பண்பின் வெண்மையை பூசிக்கொண்டு,
உள்ளே ஆசைகளையும் அநீதிகளையும் புதைத்துவைக்கும் வாழ்க்கை,அதுவே போலி ஒழுக்கத்தின் பரிதாபம்.கர்மா அனாதி என்பதால் முதல் கர்மா இல்லை என்கிறார்கள்.அதே நேரத்தில் மோட்சத்தில் கர்ம சங்கிலி முடிவு அடைகிறது என்கிறார்கள்.தொடக்கம் இல்லாத காரண - காரிய சங்கிலிக்கு முடிவு உண்டு என்று கூறுவது எப்படி சாத்தியம்?முடிவு அடையும் ஒன்றுக்கு குறைந்த பட்சம்ஒரு வரையறுக்கப்பட்ட நிலை இருக்க வேண்டும்.இல்லையெனில் அனாதி என்றும் முடிவு என்றும் ஒரே சங்கிலிக்கு கூறுவது தன்னிலை முரண்பாடு அல்லவா?.
#ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏
3. #கர்ம_யோகம்
பாகம் __3
🙏5. " யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாது இருப்பதில்லை. ஏனென்றால் பிரகிருதியில் இருந்து உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும், தன்வயமின்றி கர்மம் செய்விக்கப்படுகின்றது". 🙏
விளக்கம்: *சத்வம், *ரஜஸ், *தமஸ் ஆகிய முக்குணங்களாக இருப்பது பிரகிருதி.(இயற்கையின் படைப்பு). அது கர்ம சொரூபம் (அவரவர் கடமையான செயல்களின் வடிவம்). ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆக வேண்டும்; அதாவது செயல்புரிந்தே ஆகவேண்டும். உண்பது, உறங்குவது சுவாசிப்பது, இதயம் துடிப்பது ஆகிய எல்லாம் செயல்கள் இயல்பாக நடக்கும் கர்மம்(=செயல்கள்).
இயற்கையில் இயங்காது இருப்பது எதுவுமே இல்லை. அணு முதல் அண்டம் வரை எல்லாம் அசைகின்றன. அதில் இணைக்கப்பட்டுள்ள உயிர்களுக்கும் கர்மத்தை விட்டுவிடும் சுதந்திரம் கிடையாது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் எதுவும், தனது செயல்களை (கடமைகளை) செய்யாதிருக்க முடியாது. எனவே அனைவரும் தனது கடமைகளைச் செய்தே தீர வேண்டும் என்கிறார்! ஸ்ரீகிருஷ்ண பகவான்.
9 வினாடிகளில் ஒருவரைப் புரிந்துகொள்ளுதல்:
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
1. அவர்களின் நகங்களைக் கொண்டு ஒழுக்கம் அறியப்படுகிறது.
2. அவர்களின் காலணிகளைக் கொண்டு அக்கறை அறியப்படுகிறது.
3. அவர்களின் உடல் அமைப்பைக் (நிற்கும்/அமரும் விதத்தை) கொண்டு கடந்தகாலம் அறியப்படுகிறது.
4. அவர்களின் கண்களைக் கொண்டு நோக்கம் அறியப்படுகிறது.
5. அவர்களின் புன்னகையைக் கொண்டு குணம் அறியப்படுகிறது.
6. அவர்களின் நடையைக் கொண்டு தன்னம்பிக்கை அறியப்படுகிறது.
7. அவர்கள் கவனிக்கும் விதத்தைக் கொண்டு அறிவுக்கூர்மை அறியப்படுகிறது.
8. அவர்கள் வாதிடும் விதத்தைக் கொண்டு முதிர்ச்சி அறியப்படுகிறது.
9. தங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவர்களிடம் அவர்கள் காட்டும் நடத்தையைக் கொண்டு மரியாதை அறியப்படுகிறது.
🙏6. " கர்மேந்திரியங்களை அடக்கி புலன் விஷயங்களை மனதால் நினைத்துக் கொண்டிருக்கும் மூடன் பொய் ஒழுக்கம் உடையவன் என்று கூறப்படுகிறான்".🙏
விளக்கம்: பிரகிருதியில் ஆத்மா கட்டுண்டு இருக்கும் அளவு, மனதும் கட்டுண்டிருக்கிறது. மனது ஓயாது நினைத்துக் கொண்டிருக்கிறது. அதுவே அதன் தொழில். மனது நினைக்கிற அதே வேளையில் புற விஷயங்கள் தடுக்கப்படுகின்றன; அப்படி செய்வது முறையன்று
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை யாகம் செய்தாலும் தீராது எத்தனையோ முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
மனிதன் மனதை அடக்காது வெளி விஷயங்களை அடக்குவதால், தன் இயல்பை அவன் பிளவுபடுத்துகிறான். ஆகையால் அது பொய்யொழுக்கம் எனப்படுகிறது. எது வாழ்வை சீரழிக்கிறதோ அது பொய்யொழுக்கம்.
ஞானமற்றவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்கு செய்வது பொய்யொழுக்கம் ஆகிறது. எனவே #அர்ஜுனா! உனது கர்மத்தை (கடமையை) விட்டுவிடுவதாக நீ பாசாங்கு செய்தால், அது பொய்யொழுக்கமாகவும், மிகவும் தீமையைத் தருவதாகவும் ஆகிவிடும்! என்கிறார்
#ஸ்ரீகிருஷ்ண_பரமாத்மா. 🙏
அர்ஜுனனின் உயிரைக் காப்பாற்ற தன் சபதத்தையே மீறிய ஸ்ரீகிருஷ்ணர்....
குருக்ஷேத்திரப் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. கௌரவர் படையின் தளபதியாக இருந்த பீஷ்மர், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தி வந்தார். அவருடைய அம்புகளுக்கு முன் பாண்டவர் படை தாங்க முடியாமல் சிதறியது.
போருக்கு முன் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சபதம் செய்திருந்தார். "இந்தப் போரில் நான் எந்த ஆயுதத்தையும் எடுக்க மாட்டேன். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக மட்டுமே இருப்பேன்" என்று அனைவரின் முன்னிலையிலும் உறுதியளித்திருந்தார்.
இந்தச் சபதத்தை அறிந்த பீஷ்மரும் ஒரு சபதம் எடுத்தார்.
"நாளை கிருஷ்ணரை ஆயுதம் எடுக்க வைப்பேன். இல்லையெனில் அர்ஜுனனைக் கொல்வேன்!" என்று போர்க்களத்தில் அறிவித்தார்.
அடுத்த நாள் விடியற்காலையிலேயே போர் தொடங்கியது. பீஷ்மர் தனது முழு வீரத்தையும் வெளிப்படுத்தினார். அவரது அம்புகள் மழையைப் போல பொழிந்தன. அர்ஜுனனின் கவசம் கிழிந்தது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. தேரின் கொடிகள் அறுந்தன. குதிரைகளும் காயமடைந்தன.
கிருஷ்ணர் பலமுறை அர்ஜுனனிடம்,
"பார்த்தா! முழு மனதுடன் போராடு. பீஷ்மரை எதிர்த்து உன் சக்தியை வெளிப்படுத்து!" என்று கூறினார்.
ஆனால் அர்ஜுனனால் முடியவில்லை.
தனக்குக் குருவைப் போன்ற பீஷ்மர்மீது முழு வலிமையுடன் அம்பு எய்ய அவனது மனம் இடம் கொடுக்கவில்லை.
இதைக் கண்ட பீஷ்மர் இன்னும் வேகமாகத் தாக்கினார்.
ஒரு கணத்தில் அர்ஜுனனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
அந்தத் தருணத்தில் கிருஷ்ணரின் கண்கள் சிவந்தன. தனது பக்தனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
உடனே தேரிலிருந்து கீழே குதித்த கிருஷ்ணர், அருகில் உடைந்து கிடந்த தேர்ச்சக்கரத்தை எடுத்தார்.
சுதர்சன சக்கரத்திற்குப் பதிலாக அந்த உடைந்த தேர்ச்சக்கரத்தையே ஆயுதமாக ஏந்திக்கொண்டு, பீஷ்மரை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினார்.
அவரது உடலில் காயங்களால் இரத்தம் வழிந்தது. முகத்தில் கோபமும் கருணையும் ஒன்றாகப் பிரதிபலித்தது.
அந்தக் காட்சியைக் கண்ட போர்க்களமே ஒரு கணம் உறைந்து போனது.
ஆனால் பீஷ்மர் மட்டும் புன்னகைத்தார்.
வில்லைக் கீழே போட்டுவிட்டு, இரு கைகளையும் கூப்பி,
"பிரபோ! என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்கியம் இன்று நிறைவேறியது. உங்கள் சபதம் உடைந்தாலும் பரவாயில்லை. உங்கள் கரங்களால் உயிர் விடுவதைவிட எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்?" என்று கூறி தலையைத் தாழ்த்தினார்.
கிருஷ்ணர் பீஷ்மருக்கு முன் நின்றார். கோபம் மெதுவாக அடங்கியது.
அப்போது அர்ஜுனன் விரைந்து வந்து கிருஷ்ணரின் கால்களைப் பற்றிக்கொண்டு,
"கேசவா! உங்கள் சபதத்தை எனக்காக மீறாதீர்கள். இனி நான் முழு மனதுடன் போராடுகிறேன்," என்று வேண்டிக் கொண்டான்.
விதைகள் தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேடி முளைப்பதில்லை.
கிடைத்த இடங்களில் தன்னைச் செடியாகவோ, மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன.
அதைப் போலத் தான் மனித வாழ்வு, பிறந்து விட்டோமே என்று எண்ணாமல்
தடுமாறும் போதும், தடம் மாறும் போதும் முன்னேறி முளைத்து எழுவோம்.
புன்னகையுடன் அணுகுங்கள். ஆனால் அதில் போலித்தனம் இல்லாமல் இயல்பாக இருக்கட்டும்!
உறவு பேணுங்கள். ஆனால் அதில் சுயநலம் இல்லாமல் இருக்கட்டும்!
உதவி செய்யுங்கள். ஆனால் அது கைமாறு கருதாத உதவியாக இருக்கட்டும்!
நட்பு வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது உங்கள் கவலைகளை மறக்க வைக்கும் நட்பாக இருக்கட்டும்!
அன்பு செலுத்துங்கள். ஆனால் அது எதிர்பார்ப்பு இல்லாத அன்பாக இருக்கட்டும்!
வாழ்க்கை ஒரு நெடுந்தூரப் பயணம் தான், ஆனால்..
எப்படி இருக்கும், எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது..
நாம் வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியானதாய் மாற்றுவோம்..
முடிந்த பயணம் யாருக்கும் தொடர்வதில்லை இயற்கையின் நீதியிலே..
மகிழ்ச்சியில் பிறப்பதே மனிதம், மகிழ்வித்து மகிழ்வோம்..!!
அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணர் அமைதியடைந்து, தேர்ச்சக்கரத்தை கீழே வைத்தார்.
பீஷ்மரும் புன்னகையுடன் வில்லை மீண்டும் எடுத்தார்.
அந்த நாள் உலகம் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தது.
பகவான் தனது சொந்த சபதத்தைக் கூட மீறத் தயங்கமாட்டார்; ஆனால் தனது பக்தனைக் காப்பாற்றுவதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்.
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசம்: 🙏
"மனிதனுடைய புண்ணிய, பாவங்கள் அவனுடைய செயல்களை சார்ந்தது இல்லை; அவனுடைய மனநிலையையே சார்ந்து உள்ளன. இரண்டு நண்பர்கள் பாகவதம் வாசிக்கும் இடத்தை அடைந்தனர். நண்பா சற்றே தாமதித்து இந்த அருள் மொழிகளை கேட்கலாம் என்றான் ஒருவன். பாகவதத்தை கேட்பதால் என்ன சுகம்? நாம் விலைமகளின் வீட்டிற்கு சென்று மகிழ்வோடு இருக்கலாம் என்றான் மற்றவன். முன்னவனோ இதற்கு இணங்கவில்லை, அவன் பாகவதம் பாராயணம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து, அதன் கதைகளைக் கேட்கத் தொடங்கினான்.
விலைமகளின் வீட்டுக்கு சென்றவனின் மனமோ, அடடா! நான் தவறு செய்துவிட்டேன்; இங்கே வந்து பாபத்தைச் சேர்ப்பதைவிட, நண்பனோடு இருந்து ஹரியின் திவ்ய சரிதத்தை கேட்டு, புண்ணியம் பெற்றிருக்கலாம்! என் நண்பன் மிகவும் பாக்கியவான்! என்று அங்கே இருந்த வேளையிலும், அவன் பாகவதம் உபதேசிக்கப் படும் இடத்தில் இருந்த நண்பனுக்கு கிடைக்கும் புண்ணியத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் .
ஆனால் பாகவதம் உபதேசிக்கப்படும் இடத்தில் இருந்த நண்பனோ, நானும் விலைமகளின் வீட்டிற்கே சென்றிருக்கலாமே, அங்கே என் நண்பன் மகிழ்வோடிருப்பான்! என்று அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான். எனவே அவன் அங்கே நேரில் செல்லாவிட்டாலும் அங்கு போவதால் பெறக்கூடிய பாபத்தையே அடைந்தான். விலைமகளின் வீட்டுக்கு சென்றாலும், பாகவதம் சொல்லப்படுவதையே நினைத்துக் கொண்டிருந்தப்படியால், அவனுக்கு அந்த இடத்தில் கூட புண்ணியமே கிடைத்தது".
__ #பரமஹம்சர். 🙏
எனவே அர்ஜுனா! புலன்களை அடக்கிப் புலன் இன்பங்களை மனதால் நினைத்துக் கொண்டிருப்பவன் மூடன். அவ்வாறானவன் பொய்யொழுக்கம் உடையவன் ஆகிறான்! என்கிறார் ஶ்ரீகிருஷ்ணர். எனவே உனக்கு விதிக்கப்பட்ட கடமை எதுவோ, அதை நீ செய்வதே உனது தர்மம்! என்கிறார்
#ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
#ஶ்ரீகிருஷ்ணபகவானே_சரணம் 🙏_
12 likes
12 shares