SHEIK 🌺KSN🌺
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எங்களிடம் வந்தபோது தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை கண்டார்கள். அப்போது, “இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.
அழுக்கு ஆடையுடன் மற்றொரு மனிதரை அவர்கள் கண்டார்கள். அப்போது, “இவர் தமது ஆடையை துவைப்பதற்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (அபூதாவூத்: 4062)
நபி ﷺ அவர்கள் தூய்மையை ரொம்ப விரும்புனாங்க. தலைவிரி கோலமா இருக்குறத பார்து "சீவுற சீப்பு இல்லையா?" னு கேட்டாங்க.
அதாவது, நம்மால முடிஞ்ச வரைக்கும் சுத்தமா, நேர்த்தியா இருக்கணும்.
நபி ﷺ கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகையே விரும்புகிறான்" — முஸ்லிம்
ஆனா அது ஆடம்பரம், திமிர் இல்லாம இருக்கணும்.
நம்ம உடம்பு, தலைமுடி, ஆடை எல்லாமே அல்லாஹ் தந்த அமானிதம். அதை பராமரிக்கிறது கூட இபாதத் தான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️