ShareChat
click to see wallet page
search
"அரஃபா நோன்பு 🕋✨❤️📌 "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் 1796 மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. 🌙 அரஃபா நாளின் பிறை விடயம்: 📜 கண்ணியமிக்க அஷ்-ஷெய்க் (முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது: 🖋 பிறை தென்படும் விஷயத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் காரணத்தினால், அரஃபா நோன்புடைய நாள் வேறுபட்டால் அப்போது, நாங்கள் எந்நாட்டில் இருக்கிறோமோ அந்நாட்டின் பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா அல்லது இரண்டு ஹரம் பள்ளிவாசல்களுடைய (சவுதி அரேபியாவுடைய) பிறைபார்ப்பை பின்பற்றி நோன்பு நோற்கவேண்டுமா? 📌 கண்ணியமிக்க அஷ்ஷெய்க் அவர்கள் பதில் கூறினார்கள்: இவ்விஷயம் உலமாக்களுக்கு மத்தியில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒரே பிறையா அல்லது பிறை தென்படும் இடத்திற்கு ஏற்ப பிறை வேறுபடுமா? இதில் சரியான கூற்று என்னவெனில் பிறை என்பது அது தென்படும் இடத்திற்கு ஏற்ப வேறுபடும். எடுத்துக்காட்டாக, மக்காவில் (துல்-ஹிஜ்ஜா மாதத்தின்) பிறை தென்பட்டு (அவர்கள் அம்மாதத்தை ஆரம்பித்து) அவர்கள் ஒன்பதாவது நாளில் (அரஃபா நாளில்) இருக்க, வேறு ஒரு நாட்டில் மக்காவிற்கு ஒருநாள் முன்னதாகவே பிறை பார்க்கப்பட்டு இருக்குமேயெனில், சவுதியின் அரஃபா நாள்(ஓன்பதாவது நாள்), அவர்களுக்கு அது பத்தாவது நாளாக இருக்கின்றது, ஆகையால் அவர்களுக்கு அந்நாளில் நோன்பு பிடிக்க அனுமதி இல்லை ஏனெனில் அவர்களுக்கு அந்நாள் பெருநாள் ஆகும். அதேபோல் (இன்னொரு) எடுத்துக்காட்டாக (மற்றொரு நாட்டில்) மக்காவிற்கு ஒரு நாள் பின்னதாக பிறை பார்க்கப்பட்டுவிட்டது என்று எடுத்துக்கொண்டால், மக்காவில் ஒன்பதாவது நாள் (அரஃபா நாள்) அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கின்றது. ஆகையால் அவர்கள் தங்களுக்குரிய ஒன்பதாவது நாளில் தான் (அரஃபா) நோன்பு நோற்க வேண்டும். மேலும் அவர்கள் நோன்பு நோற்கும் (ஒன்பதாம்) நாள் மக்காவில் பத்தாவது நாளாக இருக்கும். இதுவே ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும், ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கூறுகிறார்கள்: “நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வைய்யிங்கள் மற்றும் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்”. (ஸஹீஹுல் புகாரி-1900) ❤️ இறைவன் நன்கறிந்தவன் ❤️ #உழ்ஹிய்யா #குர்பானிசட்டங்கள் #அரஃபாதினம் #islam
உழ்ஹிய்யா - ೬೬೦೬ THE DAY OF ARAFAT ரூபி ஸல் அலை கூறினார்கள்:- அரஃபா (ுல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது மந்தைய ஓராண்டிற்டும் பிந்தைய ஓராண்டிற்டும் அது பாவம் பரிகாரமாக அமையும்! முஸ்லிம் 2I52 ೬೬೦೬ THE DAY OF ARAFAT ரூபி ஸல் அலை கூறினார்கள்:- அரஃபா (ுல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது மந்தைய ஓராண்டிற்டும் பிந்தைய ஓராண்டிற்டும் அது பாவம் பரிகாரமாக அமையும்! முஸ்லிம் 2I52 - ShareChat