#📅பஞ்சாங்கம்✨ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. நவராத்திரி 2026 தேதி, சிறப்புகள் மற்றும் வழிபடும் முறை வசந்த நவராத்திரி, சியாமளா நவராத்திரி, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் ஆனி மாதத்தில் வருவது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி அதி விசேஷமாகும். ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆஷாட நவராத்திரி அல்லது ஆஷாட குப்த நவராத்திரி என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். வாராஹி அம்மனை நோக்கி விரதம் இருந்து, வழிபட்டு அவரது பாதுகாப்பு, செல்வ வளம், தீயசக்திகளிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக கொண்டாடப்படுவதே ஆஷாட நவராத்திரி ஆகும். இது சாம்பரி நவராத்திரி, வாராஹி நவராத்திரி, காயத்ரி நவராத்திரி, பத்ரகாளி நவராத்திரி உள்ளிட்ட பல பெயர்களால் நாட்டின் பல பகுதிகளில் அழைக்கப்படுகிறது. ஆஷாட நவராத்திரியே மிகவும் சக்தி வாய்ந்த நவராத்திரியாக கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுவதால் இது அனைத்து உபாசகர்களுக்கும் மிகவும் முக்கியமான நவராத்திரியாக கருதப்படுகிறது. ஆஷாட நவராத்திரி 2026 தேதி : ஆஷாட நவராத்திரி இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி துவங்கி, ஜூலை 23ம் தேதி வரை நிறைவடைய உள்ளது. நாள் 01ஜூலை 15 கலச ஸ்தாபனம், சைலபுத்திரி பூஜை நாள் 02 ஜூலை 16 பிரம்மச்சாரினி பூஜை நாள் 03 ஜூலை 17 சந்திரகாந்தா பூஜை, கூஷ்மாண்டா பூஜை நாள் 04 ஜூலை 18 ஸ்கந்தமாதா பூஜை நாள் 05 ஜூலை 19 காத்யாயினி பூஜை நாள் 06 ஜூலை 20 காலராத்திரி பூஜை நாள் 07 ஜூலை 21 துர்காஷ்டமி, மகாகெளரி பூஜை,சண்டி பூஜை நாள் 08 ஜூலை 22 சித்திதாத்ரி பூஜை நாள் 09 ஜூலை 23 நவராத்திரி பாரணை ஆஷாட நவராத்திரியில் வாராஹியை வழிபட காரணம் : தேவி லலிதாவின் போர்ப்படை தளபதியாகவும், சப்த மாதர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுபவர் வாராஹி. இவரே தடைகளை விளக்கி, பாதுகாப்பையும், வெற்றியையும் அருளும் தேவியாக கருதப்படுகிறாள். அனைத்து தீமைகளில் இருந்தும் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் விடுவித்து தைரியத்தையும், நிறைவான செல்வத்தையும் அளிக்கக் கூடியவள். ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாராஹி அம்மனை வழிபட்டால் பயம், பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள், தீயசக்திகள், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் வாராஹி தேவியை வீட்டிற்கு அழைத்து ஆஷாட நவராத்திரி காலத்தில் வழிபடுகிறோம். வீட்டில் ஆஷாட நவராத்திரி பூஜை செய்யும் முறை : வீட்டில் இரண்டு விதமான நவராத்திரி பூஜையை மேற்கொள்ளலாம். வீட்டில் வாராஹி அம்மனின் சிலை அல்லது படம் இருந்தால் அதை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், பூக்கள் வைத்து, தினமும் காலை மற்றும் மாலையில் விளக்கேற்ற வேண்டும். பழங்கள், தேங்காய், வெற்றிலை, என்ன பிரசாதம் முடியுமோ அதை படைத்து வழிபட வேண்டும். வீட்டில் வாராஹியின் சிலையோ அல்லது படமோ இல்லை என்றால் கலசம் அமைத்து வழிபடலாம். வெண்கலம் அல்லது வெள்ளியால் ஆன கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதற்குள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை ஆகியவற்றை போட்டு, கலசத்தின் மேற் பகுதியில் மாவிலை, தேங்காய் வைத்து, வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதன் மீதோ அல்லது ஒரு மனை அமைத்து அதன் மீதோ கலசத்தை வைக்க வேண்டும். "இந்த கலசத்தில் எழுந்தருளி, என்னுடைய பூஜையை ஏற்றுக் கொண்டு, உன்னுடைய அருளை எங்களுக்கு வழங்கிட வேண்டும்" என வாராஹியை மனதார வழிபட்டு, அந்த கலசத்தை வாராஹி அன்னையாக நினைத்து ஒன்பது நாட்களும் பூஜை செய்து வழிபடலாம். சொல்ல வேண்டிய மந்திரங்கள் : தினமும் விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து வாராஹியை வழிபட வேண்டும். லலிதா சகஸ்ரநாமம், துர்கா சப்தாஷ்டமி அல்லது வாராஹி மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும். "ஓம் ஷ்யாமளாயாயை வித்மஹே ஹலா ஹஸ்தாயே தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்" இந்த பொதுவான மந்திரத்தை தினமும் சொல்லி வழிபடலாம். படைக்க வேண்டிய நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பழங்கள், இனிப்பு வகைகள், சர்க்கரை வள்ளிகிழைமக்கு, மாதுளை, கருப்பு உளுந்து ஆகியவற்றை நைவேத்தியாக வாராஹிக்கு படைக்கலாம். இது எதுவும் முடியாதவர்கள் தேங்காய், வாழைப்பழம் மட்டும் வைத்து படைத்து வழிபடலாம். நன்றி மோகனப்பிரியா அவர்கள்
7 likes
8 shares

More like this