இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 07/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 316 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 4. "அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதன் சொருபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக் கொள்கிறவனெவனோ." (வெளி 14:9) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, இந்த அதிகாரத்தில் 9 முதல் 12 வசனங்கள் முடிய நான்காவது தரிசனம் விவரிக்கப்படுகிறது. இந்த நான்கு வசனங்களில் வேதாகமத்தில் இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான எச்சரிப்புகள் காணப்படுகின்றது. வெளி 13-ம் அதிகாரத்தில் மிருகத்தைக் குறித்தும், சொரூபத்தைக் குறித்தும், அதின் முத்திரையைக் குறித்தும் சொல்லப்பட்ட எச்சரிக்கைகளைப் பார்த்தோம். மிருகத்தை வணங்காதவர்கள் பொருளாதார நிலைகளில் பாதிக்கப்படவும், கொலை செய்யப்படவும் கள்ளத்தீர்க்கதரிசியானவன் கட்டளையிடுவான். அதனிமித்தம் கோடிக்கணக்கானவர்கள் மிருகத்தின் முத்திரையை தங்கள் நெற்றியிலாவது, கையிலாவது தரித்துக் கொண்டு மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவை தங்கள் தேவனாக ஏற்றுக் கொள்வார்கள். தேவ கோபக்கலசங்கள் ஊற்றப்படும் போது இவர்களுக்கு உண்டாகும் தண்டனைகளாகிய நியாயத்தீர்ப்புகளைக் குறித்து இந்த தரிசனத்தில், வானத்தில் வெளிப்படும் மூன்றாம் தூதன் பூமியின் குடிகள் யாவரும் கேட்கும்படியாக சத்தமிட்டு அறிவிக்கிறான். அந்த கொடூரமான கட்டளைகளான நியாயத் தீர்ப்புகளைப்பற்றி வருகிற வசனங்களில் தியானம் செய்வோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன்
20 likes
5 comments 11 shares

More like this