ShareChat
click to see wallet page
search
#கலைஞரின் #நினைவில்_நிறைந்த #பெருந்தலைவர்... ♦️ காமராஜ் என்ற பெயரைக் காமராஜர் என்றே இனிக் குறிப்பிடவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தவர் கலைஞர். ♦️ காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். ♦️ சென்னை மெரினா கடற்கரைச் சாலைக்குக் காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர். ♦️ சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர். ♦️ சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்குக் காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் வேண்டுகோள் வைத்து நிறைவேற்றித் தந்தார். ♦️ காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லம் ஆங்கியவர் கலைஞர். ♦️ கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர். ♦️ நெருக்கடி நிலையின்போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரைக் கைது செய்ய முடியாது, என் ஆட்சியைக் கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதைச் செய்யட்டும் என்று சொன்னவர் கலைஞர். ♦️ மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து தன் மகன் ஸ்டாலினுக்கு அவர் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர். ♦️ காமராஜர் மறைந்த அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாகத் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கித் தயார் செய்து தந்தவர் கலைஞர். ♦️ தமிழகத்திலயே முதன்முதலில் காமராஜருக்குச் சிலை வைத்தது திமுக மட்டுமே. சென்னை மாநாகராட்சியைத் திமுக கைப்பற்றியபோது பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவைக் கொண்டு திறந்து வைத்தது. ♦️ காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் கலைஞர். ♦️ தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குக் காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், "அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர். ♦️ திமுக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு” சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப் படுத்தியவர் கலைஞர். ♦️ பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான வாசகத்தைக் கேட்ட நிலையில் 'உழைப்பே உயர்வு தரும்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மவீரர் காமராஜருக்குப் பெருமை சேர்த்தார். ♦️ நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாகக் கட்டப்பட்டுக் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. ♦️ காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிடக் கலைஞர் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது. ♦️ காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவிப் 'பெருந்தலைவர் காமராசர் விருது' சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. #காமராஜர்
காமராஜர் - ShareChat