🤍🌹அல்லாஹு அக்பர் 💚அல்ஹம்துலில்லாஹ் ❤️
*_ரொம்ப கஷ்டமா இருக்கி..._*
*_வாழ்க்கையில சந்தோஷமே இல்ல..._*
*_இந்த உலகத்துல என் மேல உண்மையா பாசம் வைக்குறதுக்கு யாரும் இல்ல..._*
*_அல்லாஹ் என்னைய மட்டும் ஏன் இப்டி சோதிக்குறான் என்டு தெரியல...._*
இப்டியான விடயங்கள திரும்ப திரும்ப உங்கள் வாழ்கையில் வட்டமாய் சுழன்று கொண்டே இருக்கின்றதா?
எனின், நினைவில் கொள்ளுங்கள்!!
வாழ்க்கையில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள்!
*நபி யூனுஸ் (அலை)* அவர்கள் மீன் வயிற்றுக்குள் இருந்த போதும் கூட அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
*நபி இப்ராஹீம் (அலை)* அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
*நபி மூஸா (அலை)* அவர்கள் மனதில் குற்றவுணர்வுடன், தன்னிடம் எதுவுமே இன்றி ஒரு மரத்தடியில் அமர்ந்த போதும் கூட அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
*நபி யஹ்கூப் (அலை)* அவர்களின் மகன்மார்கள் தனது தம்பியை இழந்துவிட்டோம் என்று வந்து நின்ற போதும் கூட அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.
*மர்யம் (அலை)* அவர்களை மக்கள் வன்சொல் கொண்டு தூற்றிய போதும் கூட அவர்கள் தன் இறையோனின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை.
தாயிஃப் நகரத்து மக்கள், மனதில் ஈரமின்றி சிறு குழந்தைகளைக் கொண்டு கல்லெறிந்து நம் *கண்மணி நாயகம் ﷺ* அவர்களை காயப்படுத்தியப் போதும் கூட, அவர்கள் தங்கள் இறையோன் மீதான நம்பிக்கையை இழக்கவேயில்லை.
இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அன்பானவர்களே!...
இன்ஷாஅல்லாஹ்! நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இறைவன் சிறந்ததை வைத்திருப்பான்❤️🩹🥹. மறுமையிலும் இவற்றிக்கான கூலிகளை பன்மடங்கு அதிகரித்துத் தருவான்🤲!
நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்!
*حَسۡبِيَ ٱللَّهُ*
எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
*لَآ إِلَٰهَ إِلَّا هُوَ*
(வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை.
*عَلَيۡهِ تَوَكَّلۡتُ*
அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன்.
*وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ*
அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி.
(அல்குர்ஆன் : 9:129)
கவலைகள் கஷ்டங்களின் போது இந்த துஆவை அதிகமதிகம் நினைவுப்படுத்திக் கொள்வோம்!❤️அல்லாஹு அக்பர் 🤍அல்ஹம்துலில்லாஹ் 💚
#💚❤️🤍அல்லாஹு 🌹அக்பர் 🤍❤️💚


