ரவிசங்கர் ராஜா, ஆரணி
654 views • 25 days ago •
திருஞான சம்பந்தர் - பகுதி 3
திருவரத்துறையை வணங்குவதற்குத் தந்தையாரின் தோளிலிருந்து இறங்கித் தாமே நடந்து சென்றார்.
ஞானக்குழந்தை கால் நோக நடப்பதைப் கண்ட அரத்துறைநாதர், அந்த ஊரில் வசித்த அந்தணர்களின் கனவிலே தோன்றி, "ஞான சம்பந்தன் நம் ஊர் நோக்கி வருகிறார். அவனுக்காக முத்துச் சிவிகையும் முத்துக்குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் இருக்கின்றது.
அதனை எடுத்து சென்று அவரை அழைத்து வாருங்கள் என சொன்னார். அன்றிரவு கனவில் இறைவன் இந்த செய்தியை திருஞான சம்ந்தருக்கும் தெரிவித்தார்.
மறுநாள் காலை திருஞான சம்பந்தர் இருந்த இடத்திற்கு வந்த அரங்கதுறைவாசிகள்,
திருஞான சம்பந்தரிடம் முத்து சிவிகையில் ஏறி அமர வேண்டினர்.
திருஞான சம்பந்தர் முத்து சிவிகையில் ஏறி அமர்ந்தார், முத்துக்குடை நிழல் தந்தது,
முத்து சின்னங்கள் ஒலித்தது.
தொண்டர்கள் அரஹர என பாடி சொல்லி திருவரத்துறையை அடைந்தனர்.
திருஞான சம்பந்தர், அரத்துறைநாதரை வணங்கி
"எந்தை ஈசன் எம்பெருமான்"
என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
திருநெல்வெண்ணை, திருப்பழவூர், விசயமங்கை, திருபுறம்பயம் ஆகிய தலங்களையெல்லாம் தரிசித்து விட்டு, சண்டேசுர நாயனாரின் பிறந்த ஊரான சேய்ஞலூர் சென்றடைந்தார்
திருஞானசம்பந்தர். சண்டேசுரருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், அவ்வூரை அடைந்ததும், பல்லக்கினை விட்டிறங்கி கோவிலை நோக்கி நடந்து சென்று இறைவனை வழிபட்டார்
இறுதியில் திருக்கருப்பறியலூரில் இறைவனை பார்த்து சீர்காழி வந்தடைந்தார்.
திருஞானசம்பந்தருக்கு ஏழு வயதான போது, அவரது தந்தை சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார்.
உபநயனநாளில் மறையோர்கள் பல வேதங்களை ஓதி, முப்புரி நூலை அணிவித்தனர்.
அப்பொழுது மறையோர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
மந்திரம் தோன்றுவதற்குரிய மூலமந்திரம் எது என்று மறையோர்கள் வினவிய பொழுது
“மந்திர நான் மறையாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருவைந்தெழுத்தே மூலமந்திரம் என்றார்.
திருவாவடுதுறையில் திருஞான சம்பந்தர் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டினார்.
தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடினார் திருஞான சம்பந்தர்,
இறைவனும் உலவாக்கிழி எனும்
குறைவற்ற பொற்கிழி ஒன்றை அருளினார்.
அந்தப் பொற்கிழியை தந்தையிடம் கொடுத்தார் திருஞான சம்பந்தர்.
அப்பொழுது பாடிய பதிகமே
"இடரினும் தளரினும்" ....
திருஞான சம்பந்தரைப் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க சீர்காழி வந்தார் அப்பர்.
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை அப்பர் (தந்தை) என்று மரியாதையுடன் அழைத்தார்.
அது முதற்கொண்டு ‘அப்பர்’ என்னும் திருநாமம் திருநாவுக்கரசருக்கு வழங்கலாயிற்று.
சிறிது காலம் சென்றபின், திருக்கோலக்காவில் சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்ட அப்பர் தம் யாத்திரையைத் தொடர்ந்தார்.
மழநாட்டில் காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்த போது அங்குள்ள கொல்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் கொடிய நோயால் வருந்தி, கோவில் சந்நிதியிலே உணர்வின்றிக் கிடந்தாள்.
திருஞான சம்பந்தர்,
“துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி அப்பெண்ணின் நோயை முற்றிலும் அகற்றினார்.
பின்னர் கொடிமாடச் செங்குன்றூர் என்னும் இடத்தில்,
பனியின் கொடுமையால்,
தம் அடியார்களும் பிறரும் குளிர்ச் ஜீரத்தால் வருந்துவதைக் கண்டு, "அவ்வினைக்கிவ்வினை" என்ற பதிகத்தைப் பாடி வருத்தம் தீர்த்தார்.
திருஞான சம்பந்தர் திருமருகலை அடைந்த பொழுது இளம் பெண்ணோடு வழிப் பயணமாக வந்த வணிகன் ஒருவர் பாம்பு கடித்து இறந்து கிடந்தான்.
அவன் அருகே அந்த இளம் பெண் அழுதபடி இருந்தது,
இதனைக் கண்டு இரக்கமுற்ற திருஞானசம்பந்தர்
"சடையா யெனுமால்" என்னும் பதிகம் பாடி வணீகனை உயிர்ப்பித்தார்.
பின்னர் இருவருக்கும் திருமணம் செய்வித்து அனுப்பினார்.
சோழ நாட்டில் இருபத்தைந்து சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருஞானசம்பந்தர் பட்டீச்சுரத்தை நெருங்கும்போது வெயில் மிகுதியால் வாடிய அவரது பல்லக்குத் தூக்கிகளுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த சிவ பக்தர்களுக்கும் பட்டீஸ்வரர் தேணுபுரிஸ்வரர் ஆணையின்படி சிவகணங்கள் முத்துப் பந்தல் பிடித்தது.
சிவகணங்கள் முத்து பந்தல் பிடிக்க வரும் திருஞான சம்பந்தரை காண நந்தியையும், கொடி மரத்தையும் கொஞ்சம் தள்ளி விலகி இருக்க செய்து இறைவன் கண் குளிர அவர் வரும் அழகை கண்டார்.
இன்றும் நந்தியும், கொடிமரமும் விலகியே பட்டீஸ்வரத்தில் இருக்கிறது.
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
தொடருவோம்... ஞானக்குழந்தையை... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #திருஞானசம்பந்தர் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
10 likes
13 shares