🌳 *...நல்ல சிந்தனை...* 🌳 __________________________________ "மரம் நடுவோம்.. மழை பெறுவோம்..'' __________________________________ நம்மையும் வீட்டை சுத்தமாக வைத்து இருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...? பத்து சதவீதத்தினர் மட்டுமே நினைத்து பார்ப்போம். பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான். பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்கிறார்கள். பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது நாம் வளர்த்து விட்டுப் போக வேண்டும்.. நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம்.ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் ஆக்ஸிஜன் அதிகரித்து விடும். வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப்பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கு எல்லாம் அபராதம் போட்டால் தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் சந்ததியினர் குறைகளோடுதான் பிறப்பார்கள். நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய் பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசு படுத்தி வருகிறோம். நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது வருடங்களுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை. மணல் கொள்ளை மூலமாக மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும் தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக் கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளி மாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். புவி வெப்பமயம் ஆவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியம் ஆகிறது. வருடா வருடம் மழை நீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப்படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார பிரச்சனை.. அதை நாம்தான் சரி செய்து கொள்ள வேண்டும். தெரிந்தே பூமியை மாசு படுத்துவது இல்லை. தொண்ணூறு சதவீதத்தினர் தெரியாமல்தான் புவியை மாசு படுத்தி கொண்டு இருக்கிறோம். அதன் வீரியத்தையும்,விளைவுகளையும் நாம் அறிந்து இருக்க வில்லை.அரசாங்கம் என்ன செய்கிறார்கள் என்று நினைக்காமல் நம்மால் முடிந்த விஷயங்களில் பூமியை பாதுகாப்போம். ஆம்.,நண்பர்களே.., இன்றே உறுதி மொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதை பராமரிப்போம்... நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம். நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைப்போம் இப்படி சின்ன சின்ன செயல்கள் செய்தாலே மேலும் வெப்பமயம் ஆவதிலிருந்தும், மாசு அடைவதில் இருந்தும் பூமியை காப்பாற்றிவிடலாம். 🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
15 shares

More like this