ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் சிவ காலை வணக்கம் கோயில் திருப்பதிகம் பாடல் எண் : 4 *************** உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக் குறிகினேற் கினியென்ன குறையே பொழிப்புரை: ************** கற்று உணர்ந்த, பெரிய முனிவரும், தேவருடன், ஏனையோரது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அருமையான பொருளே! ஒப்பில்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே! பிறப்புப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே! செறிந்த இருளில் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! குணங்கள் இல்லாத ஆனந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறை உள்ளது? #நீங்கள் #கடவுள்_இருக்கிறார் #என்று #உணர்ந்த_தருணம் #எது...!? - ஓர் தம்பியின் வினா .. ஏதோ நடந்தால் கடவுள் இருக்கிறார் !! ஏதோ நடக்கவிட்டால் கடவுள் இல்லை !! என்பது தேவையை மட்டுமே பார்பவர்கள் கண்ணோட்டம் தான் .. ஆனால் நான் !! நானாய் இருக்க !! என்ன நடக்கிறது என்று கூட எனக்கு தெரியாது .. நான் என்று சுட்டி காட்டும் இவ்வுடலுக்குள் ஏது ?? எப்போது ?? எப்படி ?? எந்த நேரத்தில் எந்த மாதிரி இயங்குது என்றும் எனக்கு தெரியாது .. அதில் என்னுடைய ஒவ்வொரு நொடியும் என் இருப்பதை இந்த உடலோடு தக்கவைக்க .. எதை உள்வாங்க !! வெளியேற்ற !! தக்கவைக்க !! என்று என்னை மீறிய எனக்குள் எனக்கான இயக்கப்படும் போது .. நானே என்னுள்ளே " இருதயமே !! சிறுநீரகமே !! இயங்காதே " என்று ஆணையிட்டால் கூட என் உடல் என்று வெளியே பிதற்றி கொள்ளும் இந்த உடல் கெடுக்காதே இயங்கிக்கொண்டே என் இருப்பை தக்கவைத்து கொண்டே இருக்கும்போது .. அப்போது என்னுள்ளே என்னை மீறி ஒன்று உள்ளது என்று உள் கடந்து உணர .. அங்கே என்னை மீறிய பேராற்றலாய் என்னுள்ளே கடந்து இருக்கும் ஒன்று .. என்னை மீறி என்னை நானாக வைத்துக்கொண்டு இருக்கின்றது என்ற மெய் புரியும் .. அது வேண்டும் ?? இது வேண்டாம் ?? அது நடக்கவேண்டும் ?? இது மாற வேண்டும் !! இப்படியெல்லாம் நடந்தால் கடவுள் உண்டு !! இல்லை என்றால் கடவுள் இல்லை !! போன்ற பொய் எல்லாம் கடந்து .. எது நடந்தாலும் அதை அனுபவிக்க நான் நானாக இருத்தாலே பிரதானம் .. அந்த பிரதனத்தை நான் கேட்க்காதே, நினைக்காதே கூட .. அதியற்புதங்களை நிகழ்வித்து சாத்தியப்படுத்தி கொண்டு இருக்கிறது கடவுள் தானே .. கடவுள் என்பது கட - உன் - உள் உணர்ந்து கொள் என்பதே அது .. இதில் கடவுள் இருக்கிறார் என்று எப்போது உணருவீர்கள் என்றால் ?? நான் என்னை நானாக பார்க்கும் போது எல்லாம் உணர்வது தானே மெய் .. சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எத்தனையோ ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க முடியாது வாழ்க்கையில் போராடி பாருங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொறுத்து பாருங்கள் வேதனைகள் முடிவு பெறும்! ஏனெனில் இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை...!!! பொறுமை கொண்டவன் வாழ்வில் சிறப்பான் பொறாமை கொண்டவன் வாழ்வையே இழப்பான் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்கிட நீங்கள் தினமும் கூற வேண்டிய #கந்தபுராணம் #மேன்மை #கொள் #சைவ #நீதி #விளங்குக என்கிற #பாடல் பற்றிய #சிறப்பு #பதிவு ! #கச்சியப்ப #சிவாச்சாரியார் அருளிச் செய்தது #கந்த #புராணம். அதில் வரும் #வாழ்த்துப் #பாடல் இது. #பாடல் வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் #பொருள் #விளக்கம் வான் முகில் = வானில் உள்ள மேகங்கள் வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க. மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல். நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும். மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது. குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும். நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும். நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும் அது என்ன #சைவநீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் #முன்னோர்கள். மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும். எவ்வளவு ஒரு உயர்ந்த மனம். இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்/பாடுங்கள் உங்களது மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா? இல்லையா?என்பதை பாருங்கள். #திருச்சிற்றம்பலம் எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அது உன்னிடத்தில் இருந்தால் அதை நீ திருத்திக் கொள்… நிராகரிப்பு என்பது நிரந்தரமல்ல........ உன் தரம் உயரும் போது உன்னை கொண்டாடும் உலகம் இது.........!! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் இப்போது நடந்து விட்டது 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்
🙏🏼ஓம் நமசிவாய - சிவாா நம g நல்லதையே நினையுங்கள் நல்லதேருிடக்குட ஆனந்தமாய் இருபீபோம் சிவாா நம g நல்லதையே நினையுங்கள் நல்லதேருிடக்குட ஆனந்தமாய் இருபீபோம் - ShareChat