Arunachalam
738 views • 11 days ago
ஓப்பாரிகளும் ஓலங்களும் நமக்கான கருணையாக மாறிவிடும் தனது தாய்பாசம் தனது அரசியலுக்கு அச்சாணியாக நம்மை பாதுகாக்கும் என தனக்கு ஏற்பட்ட தோல்விகளுக்கு ஒரு ஆதரவு மனநிலையை உருவாக்கிடும் என நினைத்து தனது தோல்வியை மறைக்க அல்லது தோல்விக்கு எதிராக எமோஷனல் சூழலை உருவாக்குவது என்பது விரக்தியின் உச்சபட்ச வெளிப்பாடு...
தனக்கு நேர்ந்த தோல்வியின் அவமானத்தில் எல்லாம் தனது தாய் அவமானப் படுத்தப்பட்டார் என கூறி நீலிக்கண்ணீர் வடிப்பது அரசியல் லாபநோக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை..
போராட்டத்தின் போது பல இளம்பெண்கள் காவலர்கள் சீண்டலுக்கு உள்ளானதாக சில தகவல்கள் வெளியாகியது..
பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் அரசின் தாக்குதலுக்கு உள்ளானபோது அது அந்த தாய்மார்களுக்கான அவமானமாக பார்க்காத போது..
ஒரு நாட்டின் பிரதமர் தனது தாய்பாசத்தை வைத்து ஒரு போராட்டத்தின் வெற்றியை போராட்டத்தை கொச்சைபடுத்துவது அதற்காக தனது தாய்க்கு அவமானம் நேர்ந்தது என்பது வடிகட்டி பொறுப்பற்ற பிரச்சாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
தனது தாய் அவமானப்படுத்த பட்டார் என்பதற்கான எந்த ஆதரமும் இல்லாமல் நாட்டின் உயரிய பதவியில் இருப்போரால் செய்யப்படும் பிரச்சாரங்கள் ஒருதடவை வேண்டுமானால் இரக்கத்தை மக்களிடம் உருவாக்கலாம் தொடர்ந்து அதே சூழலை கட்டமைக்க முயல்வது மக்களை விழிப்படைய செய்யும் உங்களின் முயற்ச்சி தோல்வியாகும்.
நாட்டில் எந்த பிரதமரும் அரசியல் கட்சியினரும் முன்னெடுக்காத இதுபோன்ற கேவலமான அரசியல் இது.
பெரியாரின் மனைவி முதல் ராகுல்காந்தியின் தாயார்வரை பெண்களை அவமானப்படுத்தப்பட்டது பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்களால் ஆனால் எந்த தலைவரும் அப்போதுகூட அதை அரசியலுக்கு அதை பயன்படுத்தவில்லை.
அரசின் எதிர்பாளர்களை பெண்களை அறிவு ஜீவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோம் என அச்சுறுத்தும் பாஜகவினரின் செயல்பாடுகளை கூட அரசியலுக்கு பயன்படுத்தாத போது ...
பிரதமர் இதுபோன்று சொல்வது எந்த உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்?
உங்கள் தாயோடு சேர்த்து எல்லா தாய்மார்களும் போற்றுதலுக்கும் கண்ணியத்திற்கும் உரியவர்களே!
தயவு செய்து தரமற்ற அரசியலுக்கு செல்லவேண்டாம்.... #👨மோடி அரசாங்கம்
12 likes
17 shares