ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 24 days ago AI indicator
மருத மரம்... கதலி வனம்... வெள்வேலம்... வினை தீர்க்கும் விருட்ச அற்புதங்கள்! மருத மரம் தரும் மருந்து! சிவகங்கை மாவட்டத்தில் நெற் குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருது பட்டி. இந்தக் கிராமத்தின் தொடக்கத் திலேயே அமைந் துள்ளது பறியாமருந்தீஸ் வரர் ஆலயம். சிவ கங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கல் திருப்பணி செய்து கட்டப் பட்ட ஆலயம். ‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். அதாவது செடியில் பறிக்காத மருந்தே இவர். இவரை நினைத்தாலே, வணங்கினாலே வந்த நோய் பறந்து போகுமாம். இந்தக் கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாக பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள்புரி கிறார் மருத விநாயகர். பக்தர்களின் குறைகளையும் பிணிகளையும் தீர்க்கும் தெய்வம் இவர். ராகு - கேது பரிகாரம், நாக தோஷ நிவர்த்தி ஆகியவற்றுக்காக வேண்டிக்கொண்டு பக்தர்களால் அடித்து வைக்கப்பட்டுள்ள கல் நாகங்கள் இந்த விநாயகர் சந்நிதி யைச் சுற்றிலும் நிறைய உள்ளன. இந்த மருத மரம்தான் தல விருட்சம். இந்த ஆலயத்தை எழுப்பும் போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம் போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியதாம். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்தது என்கிறார்கள். இந்த மரமும் அதன் பட்டைகளும் மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தவை. மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும். இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு- கேது தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. நன்றி...ரவிசங்கர் ராஜா, ஆரணி 🚩🕉🪷🙏🏼 #🕉️கணபதி போற்றி #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🙏ஆன்மீகம்
4 likes
10 shares

More like this