Makkal Mugam
647 views • 2 months ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா
தூத்துக்குடி, மே.13 -
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 4,000 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
கொடைவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சைவ வேளாளர் மண்டபத்தில் ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் அதிபர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் நடைபெற்றது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் அன்னதான நிகழ்வை மாவட்ட அஇஅதிமுக தொழிற்சங்க தலைவரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி மகமை அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன், எல்.ஐ.சி கிட்டு, தொழிலதிபர் டி.ஏ. தெய்வநாயகம், எஸ்.பி. டைகர் சிவா,, பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம், 39வது வார்டு மகளிர் அணி தலைவி உஷாதேவி, முக்கிய நிர்வாகிகள், கோவில் கமிட்டியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
14 likes
12 shares