*அனைத்து வளங்களை*
*அருளும் ஆனி மாத* *சிறப்புகள்*
தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமான ஆனி மாதம் தேவர்களின் 'மாலைக்காலம்' என்று போற்றப்படுகிறது.
சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி.
அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி.
தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு
ஆனி மாதக் காலம்.
நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது.
ஆனி மாதம் இளவேனிற் காலம் எனப்படும். இந்த மாதத்தில் கடுங்கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசி நம்மை குளிர்விக்கும்.
ஆனி மாதத்தில்தான் தேவர்களைக் காப்பாற்ற திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் தேய்பிறை துவாதசியன்று வருகிறது.
பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி தேவர்கள் அமிர்தம் கடைந்தெடுக்க உதவிய அவதாரமே கூர்மாவதாரம்.
ஆன்மீக வழிபாட்டிற்கும், சிவபெருமானின் அபிஷேகத்திற்கும், இயற்கை சார்ந்த ஆன்மீக திருவிழாக்களுக்கும் இந்த ஆனி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆனி மாதத்தின் முக்கிய சிறப்புகள்
ஆனித் திருமஞ்சனம்: ஆனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த அபிஷேகம் மற்றும் ஆராதனை 'ஆனித் திருமஞ்சனம்' என்று அழைக்கப்படுகிறது.
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.
ஆனி மாத உத்திர நட்சத்திரன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.
சிவபெருமானின் நடனக் காட்சியை தரிசிக்க இது மிக உகந்த நாளாகும்.
ஆனி மாதம் நடக்கும் நடராஜப் பெருமானின் ஆனித் திருமஞ்சன மகிமைகள்:
ஆனித் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
எல்லா சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும்.
வைணவத்தலங்களில் தலை சிறந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்.
குருபூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த ஆனி மாதத்தில்தான்.
இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும்.
பொதுவாக நிறைய கோவில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும்.
திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில்தான் பிறந்தார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது.
'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார்.
தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரம் தலத்தில்
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டற கலந்தார்.
இதையொட்டி சிதம்பரத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஏகாதசிகள் அனைத்துமே விசேஷமானவை என்றாலும், ஆனிமாத தேய்பிறை ஏகாதசி 'யோகினி ஏகாதசி' என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டுக்கு சிறந்து விளங்குகிறது.
அன்று தான் அழாகாபுரி மன்னனான குபேரன் ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு
தன் நோயைப் போக்கிக்கொண்டான் என்று கூறப்படுகிறது.
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர்.
வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.
'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள்.
காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர்.
இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது.
இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த நிர்மலா ஏகாதசி விரதமிருக்கலாம்.
ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும்.
பெருமாள் கோவில்களில் மூலவருக்குச் சாத்தப்படும் கவசங்களைக் களைந்து, வருடாந்திர தூய்மைப் பணிகளைச் செய்து சிறப்பு திருமஞ்சனம் செய்யும் வைபவம் (ஜேஷ்டாபிஷேகம்) இந்த ஆனி மாதத்தில்தான் நடைபெறுகிறது.
கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம்.
தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்,
இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
பொதுவாகவே நிறைய கோவில்களில் ஆனி மாத பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம்.
திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளியில் கருவறையில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும்.
கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள்.
பிறகு அந்த மாம்பழங்களை பக்தர் களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள்.
இதேபோல திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ தாயுமானவர் கோவிலிலும் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழப்பழத்தார்கள் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழவேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.
பூஜை நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.
காரைக்கால் மாங்கனித் திருவிழா: உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் வரலாற்றோடு தொடர்புடைய மாங்கனித் திருவிழா இந்த ஆனி மாதத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
முக்கியமாக மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள
தீர்த்தக் குளத்தில் தெப்பத்திருவிழா ஆனி பௌர்ணமி அன்று நடைபெறும்.
வராகி நவராத்திரி: ஆனி அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை நாட்களில் வராகி அம்மனை வழிபடுவதற்குரிய
வராகி நவராத்திரி தொடங்குகிறது.
சாவித்திரி விரதம்:
பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் ஆனி மாத பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்கின்றனர்
ஆனி உத்திராடம் & கேட்டை: பெரியாழ்வார் மற்றும் அருணகிரிநாதர் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் அவதரித்த மாதமாகவும் இது அறியப்படுகிறது.
ஆன்மீக பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் விரதங்கள் மற்றும் வழிபாடுகள் மூலம்
மன அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🚩🕉🪷🙏🏼 #ஆனி மாதம் தொடக்கம்! #ஆனி #வெல்கம் ஆனி #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #🙏ஆன்மீகம்



