திருநீற்றுச் சுவடு
900 views • 10 days ago
#அண்ணாமலையார் கோவில்.. திருவண்ணாமலை கிரிவலம்.. #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #அண்ணாமலையார் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 டுபாக்கூர் யூடியூபர்கள் மற்றும் அரைகுறை ஜோதிடர்களின் உருட்டுகளால் சிக்கி இருக்கும் திருவண்ணாமலை 🔥
👉 அண்ணாமலையாரை கிரி வலம் வந்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டாது, உழைத்தால் மட்டுமே.
👉 அஷ்ட லிங்கங்களுக்கும் ராசிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
👉 இடுக்கு பிள்ளையார் கோயில் ( மோக்ஷ த்வாரம் ) வழியாக சென்று வந்தால் மோக்ஷம் லாம் கிடைக்காது. ஞானம் , யோகத்தால் மட்டுமே மோக்ஷம்.
👉 குபேர லிங்கம் தரிசனம் செய்தால் குபேரன் போல வாழலாம். இது பெரிய உருட்டு. அந்த லிங்கம் குபேர திக்கில் உள்ளது அவ்வளவே.
👉 டுபாக்கூர் யூடியூபர்கள் சில அரைகுறை ஜோதிடர்கள் அண்ணாமலையாரை 3 , 5 , 7 சுற்றி வந்தால் எல்லாமே சாத்தியம் என்கின்றனர். இது உண்மை இல்லை நம்மில் பலர் நடைபயிற்சி தானே செல்கிறோம்.
👉 பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மாரத்தான் ஓட்டம் படு ஜோராக உள்ளது. சிவ நாமம், திருமுறை , திருவாசகம் ஓதி சுற்றுவது இல்லையே. திண்பண்டம், சேட்டை, ஜூஸ் , கால்களுக்கு மசாஜ் என்று தானே செல்கிறோம்.
👉 அண்ணாமலையார் மீது பக்தி முற்றியது போல புகைப்படங்கள், செல்ஃபிகளும் பஞ்சம் இல்லை.
👉 இங்கே பக்தி இல்லை. தொப்பி அம்மா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அவரை சித்தர் போல மாற்றி அந்த அம்மாவை டிரெண்ட் செய்துள்ளார் யூடுபர்கள்.
👉 தலையில் திருமுறை புத்தகங்களை சுமர்ந்து செல்வது , அப்பரதக்ஷிணமாக மலையை வலம் வருவது அதுவும் கையில் பாமாயில் எண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்ட தீபம் சுத்த முட்டாள்தனம்.
👉 கோயில் வாசலில் 365 திரி டால்டா ( நெய் விளக்கு so called) வியாபாரம் படு ஜோர். இவ்வாறு டால்டா, பாமாயில் எண்ணெய் விளக்கு ஏற்றினால் பாபம் தான்.
👉 பக்தர்களுக்கு volunteer ஆக விபூதி போடும் போலி சாமியார்கள் மேலும் பல கட்டுரைகளை உருவாக்கி அண்ணாமலையாரையும் , உள்ளூர் வாசிகளையும் , நிம்மதி இல்லாமல் செய்துள்ளார் பலர்.
நன்றி பகிர்ந்த பதிவு
12 likes
9 shares