Makkal Mugam
631 views 3 months ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கப்படும் வி.ஜி.சரவணன் அறிக்கை தூத்துக்குடி, மே. 13 - ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வி.ஜி.சரவணன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடப்பதாக பலர் என்னிடம் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். வருங்காலங்களில் இந்த தொகுதியில் பெண்களுக்கு எதிராக கேலி, கிண்டல் மற்றும் ஈவ்-டீசிங் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இனி சுதந்திரமாக நடமாட அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
14 likes
12 shares

More like this