இன்று உலக பாரம்பரிய தினம்...!! மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இனத்திற்கும் பல்வேறு ஒவ்வொரு வகையான பாரம்பரிய பெருமைகள் உண்டு. நாட்டுக்கு அழகும் பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே. ஆனால் மாறிவரும் நவீன உலகத்தில் எண்ணற்ற பாரம்பரியங்களை இழந்துள்ளோம். இன்றும் இழந்து கொண்டே தான் இருக்கிறோம். மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் மேலும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1983-ம் ஆண்டு ஏப்., 18ம் தேதி யுனெஸ்கோ(UNESCO) நிறுவனத்தால் உலக பாரம்பரிய தினம்(World Heritage Day) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 😊😊😊 #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா
9 likes
16 shares

More like this