Nethaji
6K views • 5 days ago
#👏Inspirational videos 16, 2026
*திருச்சிற்றம்பலம்*
*சேக்கிழார் பெருமான் அருளிய பன்னிரண்டாம் திருமுறை - பெரியபுராணம்*
*கண்ணப்ப நாயனார் புராணம் - இலை மலிந்த சருக்கம்*
*பாடல் :*
*பேறினி இதன் மேல் உண்டோ ?*
*பிரான் திருக் கண்ணில் வந்த*
*ஊறு கண்டு அஞ்சித் தம்*
*கண் இடந்தப்ப உதவும் கையை*
*ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக்*
*கொண்டு என் வலத்தில்*
*மாறிலாய் நிற்க என்று மன்னு*
*பேர் அருள் புரிந்தார்*. - 12.016.185
*பொருள் :*
*சிவபெருமானிடம் இருந்து பெறக்கூடிய பாக்கியங்களில், இதைவிடப் பெரிய நற்பேறு இனி வேறு ஏதேனும் உண்டோ? நம் தலைவனான சிவபெருமானின் அடுத்த அழகிய திருக்கண்ணில் இருந்தும் வழிந்த குருதிப் பெருக்கைக் கண்டு அஞ்சி, அதனை நிறுத்தத் தம்முடைய மறு கண்ணையும் பிடுங்கி சிவபெருமானின் கண்ணில் அப்ப முற்பட்ட கண்ணப்பரின் கையை, இடபத்தில் வந்த சிவபெருமான், தன் திருக்கரத்தால் தடுத்துப் பிடித்துக் கொண்டு என்னுடைய வலப்பக்கத்தில் என்றும் மாறாத அன்போடு நிற்பாயாக!" என்று கூறி நிலைபெற்ற பெரிய பேரருளைக் கண்ணப்ப நாயனாருக்குச் சிவபெருமான் வழங்கினார்*
*திருச்சிற்றம்பலம்* #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #ஆன்மிகம்
55 likes
101 shares