பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
158 views • 3 days ago
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 09/07/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 318
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
XII “அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதன் சொருபத்தையும் வணங்குகிறவர்களுக்கும் அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது." (வெளி 14:11)
அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, இவ்வசனத்தின் படியும், வெளி 19:3-ம் வசனத்தின்படியும் "அவளுடைய (மகாபாபி லோன்) புகை என்றென்றைக்கும் எழும்புகிறது," என்று அறிய முடிகிறது. மிருகம், அதன் சொரூபம், அதின் நாமத்தின் முத்திரை என்று தேவனால் விரும்பப்படாத மூன்று காரியங்களும் மீண்டும் தனித்தனியே அறிவிக்கப்படுகின்றன. சதாகாலங்களிலும் வாதையின் புகை எழும்புகிறது என்று கூறும்பொழுது, இந்த துன்மார்க்கர்கள் நித்திய நித்தியமாக அக்கினியால் வாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. வெளி 19:20; வெளி 20:14,15; வெளி 21:8 ஆகிய திருவசனங்களும் மேற்காணும் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது என்பதை அறிகிறோம்.
“அவர்களை மோசம் போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள், இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்". (வெளி 20:10) என்று கூறுகிறது. அவர்கள் (சாத்தானுடைய திருத்துவத்தின் மூன்று நபர்களும்) இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் என்றால், சாத்தானுடைய முத்திரையைத் தரித்து அவனை வணங்கினவர்களுக்கும் அதே தண்டனை தான் என்று அறிந்து கொள்கிறோம்.
உபத்திரவ, மகா உபத்திரவ காலத்தில் மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவின் அடையாளங்களாகிய அவன் சொரூபத்தையும், முத்திரையையும் ஏற்றுக்கொண்டு வணங்குபவர்கள் தான் இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமல் வாதிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, "தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும். வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.. அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி. நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்." (2 தெச 1:7,8,10). இவ்வசனங்களின்படி உலக தோற்ற முதற் கொண்டு, முடிவு மட்டுமான மக்களில், தேவனை அறியாதவர்கள் தேவனுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் யாவருமே நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைவார்கள் என்பதை அறிய முடிகிறது.
கிருபையின் காலத்திலிருக்கும் நாம் கர்த்தராகிய இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய ஜீவனை அடையும் பொருட்டு, பூரண பரிசுத்தத்தின் தேவனாகிய கிறிஸ்து இயேசுவின் மகிமையின் மறுரூபத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவனுடைய சத்திய வசனங்கள் போதிக்கின்றது. இப்படிப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளியாகும் ஜீவியம் செய்து ஆயத்தமாக வேண்டும். மாறாக ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவோ, ஒரு திருச்சபையில் ஐக்கியமாயிருக்கிறோம் என்பதற்காகவோ, ஜெபித்து வேதம் வாசிப்பது போன்ற சில கிறிஸ்தவ கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவோ கர்த்தருடைய இரகசிய வருகையில் சேர்ந்து சீயோனின் நித்திய வாழ்க்கையை அடைந்து கொள்ள இயலாது.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன்