SIVAKUMAR M
1K views 1 days ago
💧 நீர்ப்பாசனத் திட்டங்கள் – பாதியளவு மட்டுமே நிம்மதி! தமிழக வேளாண்மையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சில நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், விவசாயிகளின் நீண்டகால நலனுக்குத் தேவையான பல முக்கிய திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 🔹 காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வெறும் ₹150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குறைந்தது ₹15,000 கோடி தேவைப்படுகிறது. 🔹 தமிழகத்தின் அனைத்து முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களையும் திட்டமிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற, ஆண்டுதோறும் ₹25,000 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும். 🔹 தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் போன்ற விவசாயிகளுக்கு மிக முக்கியமான திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது கவலைக்குரியது. 🌾 விவசாயமே நாட்டின் முதுகெலும்பு. நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால்தான் விவசாயம் வளரும்; விவசாயம் வளர்ந்தால்தான் தமிழகம் வளரும். #நீர்ப்பாசனம் #விவசாயம் #தமிழ்நாடு #காவிரி_குண்டாறு_இணைப்புத்திட்டம் #தருமபுரி #அரியலூர் #விவசாயிகள்நலன் #நீர்வளமேம்பாடு #AnbumaniRamadoss #PMK #Agriculture #TNWaterResources #CauveryGundar #FarmersFirst #🌱விவசாயம் #🤝பா.ம.க #📺அரசியல் 360🔴 #தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay
14 likes
12 shares

More like this