Makkal Mugam
617 views • 2 months ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேலங்காட்டில் ஏரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை முப்பதாம் தேதி புஷ்பரத தேர்த்திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பொற்கொடி அம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள நான்கு கிராமங்களில் வீதி உலா வந்து இறுதியில் வேலங்காட்டு ஏரியில் உள்ள கோவிலுக்கு தேரானது வந்தடையும் இதனைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் செல்லும் பாதைகளில் நீர் மோர் பந்தல், அன்னதானம், நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக தார்வழியில் பாட்டாளி மக்கள் கட்சி செங்குட்டுவன் தலைமையில் 26 ஆம் ஆண்டுஅன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் இளங்கோவன், வேல்முருகன் , சற்குணன் , துரை , கணேசன், தமிழ்ச்செல்வி , ஆகியோர் கலந்து கொண்டு புளி சாதம், தயிர் சாதம், வெஜி சாதம் போன்றவற்றை அன்னதானமாக வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
8 likes
12 shares