S.ANTHONY✝️YESUMARY
863 views • 4 hours ago
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*01.08.2026 (சனி)*
*⚜️மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், *"உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக்கொள்வார்."* என இறைவாக்கினர் எரேமியா கூறியதை நாம் வாசித்தோம்.
பாவங்கள் செய்த நாம் அனைவரும் அதை உணர்ந்து இரக்கம் மிகுந்த நம் இறைவனிடம் பாவமன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 69:14-ல்,
*"சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்."* என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
அலகையின் கட்டுக்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் நாம் முழுமையாக விடுதலைபெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம் முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*
இன்றைய புனிதரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனருமான புனித அல்ஃபோன்சஸ் மரிய லிகோரியின் நினைவுநாளான இன்று இரட்சகர் சபை குருக்கள் அனைவருக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,*
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
24 shares