ShareChat
click to see wallet page
search
நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் செய்யும் போதும்., நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் எதிர்கொள்ளும் போதும்... நாமும் காயப்படாமல், யாருக்காக அந்தக் கடமைகளை ஆற்றுகிறோமோ, அவர்களும் காயப்பட்டு விடாமல், அந்தக் கடமைகளை பூரணமாக்கிக் கடந்து போக வேண்டியிருக்கிறது. இதைத்தான் 'பக்குவம்' என்று சொல்கிறோம். இந்த பக்குவம்தான்... 'கர்மயோகம்' என்ற 'கடமைகளை பூரணத்துவம்' செய்யும் பாதையில் நம்மை அழைத்துப் போகிறது. இந்தப் பாதையின் ஆரம்பம், இறவனின் மீது வைக்கும் பக்தியிலிருந்து ஆரம்பிக்கிறது. இறுதியில், இறைவனின் பேருளால், ஒரு சத்குருவின் தொடர்புடன் பூரணத்துவமும் அடைகிறது. அந்த சத்குருவின் இடைபடல்தான்... நம்மை விதிக்கப்படாத கடமைகளிலிருந்து விலக்கி, விதிக்கப்பட்ட கடமைகளுக்குளுக்குள் மட்டுமே பயணிக்க வைத்து... பக்குவத்தின் பாதையில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. நம்மை பக்குவமாக்கிவிடும் சத்குருவின் அனுக்கிரகம், உலக வாழ்க்கையையும்... உள் வாழ்க்கையையும் உள்ளடக்கியதுதான். சந்தேகம் கொள்ளத் தேவையேயில்லை ! குருவே சரணம் ஸ்ரீ ராகவேந்ராய நமஹ ... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✨கடவுள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - Designed by RYP Designed by RYP - ShareChat