*கனிவு காட்டும் காரப்பாக்கம் கற்பகேஸ்வரர் ஆலயம்* கங்கை என்றதுமே அதன் நீர் வளமும், அது தரும் நில வளமுமே நம் நினைவுக்கு வரும். கங்கை தேவியானவள், தான் பாயும் வட இந்தியாவை வளப்படுத்துவது போல, தென் இந்தியாவையும் வளப்படுத்தும் விதமாக, இங்கே பல பகுதிகளில் ‘கங்கையம்மன்’ என்ற பெயரில் அம்மனாக இருந்து அருள்பாலித்து வருகிறாள். #ஈசனைதேடிகுழு2026-- அதில் ஒரு திருத்தலம் தான் காரப்பாக்கம். இங்கு வீற்றிருந்து அருளும் கங்கையம்மன், தன்னை நம்பி வந்தவர்களை கைதூக்கி விடும் தேவியாக இருக்கிறாள். தன்னுடைய தலையில் இடம் அளித்த சிவபெருமானுக்கு, கங்கையம்மன் ஆலயத்திற்குள், தனி ஆலயமாக சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. கற்பகேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்படுகிறது. மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம் ஆகும். இங்கிருக்கும் கங்கையம்மன் ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்குள்ள குளக்கரை மரத்தடியில் சுயம்புவாக தோன்றியவள் இந்த அம்மன். இந்தப் பகுதி வாழ் மக்கள், விவசாயத்தின் விதை விதைப்பிற்கும், அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே செய்து வந்துள்ளனர். அறுவடைக்குப் பின், அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் எடுத்தும், ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள், இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பே பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் பார்வையால், மழை அதிகரித்து குளத்தில் வெள்ளம் வந்தது. இதனால் அம்மன் இருக்கும் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. எனவே சிவனடியார் ஒருவரின் முயற்சியால் தற்போதைய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. இந்த கங்கையம்மன் ஆலயத்தின் பின்புறத்தில் தான், கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் கங்கையம்மனுக்கு ஆடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் ஒரு பகுதியாக கும்பம் வைத்தல், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவை நடைபெறும். அந்த நேரங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தில் களை கட்டியிருக்கும். கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில், கங்கையம்மன் சன்னிதியின் பின் புறம் இருக்கிறது. கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்து முன்மண்டபம் சென்றதும், இறைவனின் கருவறை நம்மை வரவேற்கிறது. கருவறைக்குள் அடியார்களைக் கவர்ந்து இழுக்கும் கற்பகேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாரைக் கொண்டு அழகிய திருமேனியில் ஜொலிக்கிறார். #ஈசனைதேடிகுழு2026-- பக்தர்கள் வேண்டும் வரத்தை அளிக்கும் வல்லமை படைத்தவராக இந்த இறைவன் இருக்கிறார். சென்னையில் இருந்து ஓ.எம்.ஆர். என்னும் பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூருக்கு முன்பாகவும், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவிலும் காரப்பாக்கம் திருத்தலம் இருக்கிறது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே ஆலயம் அமைந்திருப்பது சிறப்பு. காரப்பாக்கம் செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. #உண்மையை அறிவோம் #god
11 shares

More like this