இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்க படுகிறது - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! காயல் பட்டிணம் ஜீலை 13 இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுக்க படுகிறது என காயல் அப்பாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 2022 ஆண்டில் பாப்லர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பின் மீது பணம் பறி மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மத்திய அரசால் தடை செய்ய பட்டது . தடை செய்ய பட்ட உடன் பாப்லர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகியான அபூபக்கர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க பட்டார். மேலும். இது சம்பந்தமாக கைது செய்து 4 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்தும் புற்று நோயினால் பாதிக்க பட்டுள்ள அபூபக்கர் மருத்துவ சிகிச்சை பெற பரோலில் விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மனிதாபிமான மற்ற செயலாகும். மேலும். அபூபக்கர் மருத்துவ சிகிச்சை பெற உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . மேலும் தமிழக சிறைகளில் 20 ஆண்டுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான நோயால் பாதிக்க பட்டு பலரும் உயிரிழந்து உள்னர். ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கருணையின் அடிப்படையில் அரசியல் சாசன பிரிவு 161ன் படியும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார். #முக்கிய செய்தி
8 likes
16 shares

More like this